Saturday, October 8, 2016
Friday, October 7, 2016
வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி
தேவையான பொருட்கள் :
வெந்தயக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
குதிரைவாலி மாவு - 1/4 கப்
கம்பு, சோளம் மாவு - 1/4 கப்
திணை அரிசிமாவு - 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
சீரகத்தூள் - 1/2 தே.க
கொத்தமல்லி தூள் - 1/2 தே.க
தூள் உப்பு - 3/4 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தயிர் - 5 தே.க
தேவையான அளவு எண்ணெய்
மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீருடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். வட்ட வடிவில் சப்பாத்தியாக இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து, சுருட்டி அடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி தயார். பன்னீர் பட்டர் மசாலா அல்லது காய்கறி குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.
Thursday, October 6, 2016
Monday, October 3, 2016
Saturday, October 1, 2016
Friday, September 30, 2016
காக்கும் வரமருளும் அன்னையே!
பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...