Saturday, October 8, 2016

சோதிவடிவே! சுடரொளியே!





ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின்  சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்

Friday, October 7, 2016

வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி









தேவையான பொருட்கள் :


வெந்தயக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு  - 1/4 கப்
குதிரைவாலி மாவு - 1/4 கப்
கம்பு, சோளம் மாவு - 1/4 கப்
திணை அரிசிமாவு  - 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
சீரகத்தூள்  - 1/2 தே.க
கொத்தமல்லி தூள் - 1/2 தே.க
தூள் உப்பு   - 3/4 தே.க
மஞ்சள் தூள்  - 1/2 தே.க
தயிர்    - 5 தே.க
தேவையான அளவு எண்ணெய்

மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீருடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். வட்ட வடிவில் சப்பாத்தியாக இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து, சுருட்டி அடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வெந்தயக்கீரை  பலதானிய ரொட்டி தயார். பன்னீர் பட்டர் மசாலா அல்லது காய்கறி குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Thursday, October 6, 2016

INDIAN TEMPLES - கற்பக நாயகி - திருக்கருகாவூர்

ஓம் மகாசக்தியே போற்றி!



பவள சங்கரி

எத்தனை எத்தனை பிறவியம்மா
எல்லாம் உன் அருளம்மா
அத்தனையும் பாவங்களன்றி
வரமாக்கிய வடிவுடைநாயகியே
நாடகமான வையகத்தில்
பூடகமான மனமின்றி
சேடகனாய் வாழாமல்
சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

Friday, September 30, 2016

காக்கும் வரமருளும் அன்னையே!



பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...