Tuesday, June 28, 2011

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!



அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!

அதோ அந்த பறவை போல வாழ ஆசைதான்
இதோ மெல்லிய என் சிறகை நீ சீண்டாத வரை

அந்த நிலவைத் தேடி வானுலகம் சென்றேன்
அந்த நிலவும் கள்ளமாய் மறைந்தது மேகத்தினுள்

தண்ணிழல் தேடி மலையருவியை நாடிச் சென்றேன்
தண்ணீரும் வெண்ணீரானது வெந்து வாடி நின்றேன்

பன்னீராய் துளிர்க்கும் வெண்பனிச் சிகரம் சென்றேன்
பன்னீரும் செந்நீராய் மாறி பனிச்சூடாய் தகித்தது

பளபளக்கும் வைரஒளியை பேதையாய் நெருங்கினேன்
வைரஒளியும் மின்னலாய் மாறி மறைந்தே போனது

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவிதானே
உயரவும் வேண்டாம் தாழவும் வேண்டாம்!

1 comment:

  1. //உயரவும் வேண்டாம் தாழவும் வேண்டாம்!//

    அதுவும் சரிதான்.

    நல்ல கவிதை பவளா.

    ReplyDelete

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...