Wednesday, September 24, 2014

அம்மையும் நீயே!


பவள சங்கரி


அம்மையும் நீயோ இப்புவியும் உன்னதோ
உன்னைநினைந்தே தமிழை ஓதினேன் – என்னை
கனிந்தேற்றுக் கொள்ளாத நாயகியுண்டோ உண்டோ
செருக்கேற்றுக் கொள்ளாத கவிஞனும்!

தேவி பிறந்தவூர் அலைகடல் சூழுமூர் 
சிற்றாடையும் சிந்தூரமும் மாணிக்கமும் சூடியவள்
புன்னகையும் புதுப்பொலிவும் பூமணமும் நித்தம்
நிறைதலம் நீள்கடல் நாயகியே!

No comments:

Post a Comment