Thursday, July 27, 2017

INDIA / VIII – The transcending eye


கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி
800px-CandlesInBuddhistTemple
கண்களைக் கடந்து

ஓ ஒளியே, மெய்மையில்   சுடர்மிகும் ஒளி நீயே.
சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.
நாளுக்கு நாளும்
இரவின் பின் இரவும்
ஓ ஒளியே, பிரார்த்தனையில்
உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
மலர்கிறாய் நீ.


உறுதியாய் நித்தியத்திற்காய் 
மலரும் மணமிகு தாமரையாய் 
ஆகிவிட்டாய் நீ.

No comments:

Post a Comment