Thursday, April 30, 2020

தூய்மை இந்தியா



முயல் ஆமை கதைதான் நினைவிற்கு வருகிறது. ஒரு காலத்தில், வெளிநாட்டவர் மட்டுமன்றி, வெளிநாட்டுவாழ் பெரும்பாலான இந்தியர்கள் கூட நம் இந்தியாவை அசுத்தமான நாடு என்று கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதையும் மறக்கமுடியாது. நமது பிரதமர் வீடு தோறும் கழிவறை இருக்கவேண்டும், பொது இடங்களை மக்கள் கழிப்பிடங்களாக்கக்கூடாது என்று உறுதியெடுத்து தீவிரமாகச் செயல்படுத்தியதில், அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளோம். 4, 5 ஆண்டுகளுக்கு முன்புகூட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், பொது இடங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தது பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் நம் மக்கள் அதை எளிதாகப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர். இன்று கொரொனா புண்ணியத்தால் பொது இடங்களில் எச்சில் உமிழ்வதும் குற்றமாக்கப்பட்டு அதுவும் பழக்கத்திற்கு வந்துவிட்டது. நமது நகராட்சி, மாநகராட்சிகளும் தூய்மையான கழிவறைகளை அமைத்துவிட்டால் தூய்மையான இந்தியாவை விரைவில் காணப்போவது உறுதி. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான பிரான்சு, இத்தாலி, இசுபெயின், அமெரிக்கா, ஈக்குவேடர் போன்ற நாடுகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது அதிர்ச்சியாக உள்ளது. நம் இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய இந்தக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே தூய்மையான நோயற்ற இந்தியாவாக இருப்பது உறுதியாகும்.

No comments:

Post a Comment