Monday, January 13, 2014

திரை கடலோடி.....





பவள சங்கரி


”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி..  ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா நொந்து போச்சு சாமீ.  டாக்டரு கண்டமேனிக்கு வையுறாரு. இனிமேல்பட்டு மேசன் வேலைக்கு போவக்கூடாதாம். அப்புடி ஒரு வியாதியாம் எனக்கு. அதுக்கும் மீறி போனா அப்புடியே போய் சாவு, என்னாண்ட திரும்பி வராதேங்கறாரு. எனக்கு மட்டும் என்ன அந்த கல்லு, மண்ணுல ஓயாம வேல செஞ்சி  எப்பப் பார்த்தாலும்  இருமலோட  திரியணும்னு ஆசையா? பாக்கறவனெல்லாம், பரிதாபமா ஏண்டா இன்னும் வேலைக்கு வறேன்னு கேக்கறானுவ..  இருமல் நிக்காம வருது. அப்பப்ப சளியோட ரத்தமும் வருதுல்ல, அதான் பய புள்ளைக பயந்து போவுதுக. நாளமின்னிக்கி இங்க வந்து உழுந்து கிடந்தா உன்னய எவன் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போறதுன்னு மேஸ்திரி கண்டபடிக்கு திட்டறான். இனிமே வேலைக்குப் போவ முடியாது. வேணுமின்னா வெளிய காய்கறி கடை போட்டு ஒக்காந்துக்கறன். அதுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்ணுனா தேவலப்பா. மனசில இருக்குற தெம்பு உடம்புக்கு இல்லியே, நான் என்னத்ததான் செய்யட்டும். 10 வயசுல காரச்சட்டி தூக்குனவன், இந்த 40 வருசமா காரையில கிடந்து குடலெல்லாம் வெந்து கெடக்குது”

“இந்தா..  ஏன் இப்புடி புலம்பற. செத்த நிறுத்து. பையன் பாவம் இப்பத்தான் அலுத்துப்போய் ஊட்டுக்கு வந்திருக்கு. வந்ததும் உன் ராமாயணத்தை ஆரம்பிக்கிற. என்னா மனுசன்யா நீ? அது பாவம் காலைல 7 மணிக்கே தின்னும், திங்காம ஓடுச்சி. இப்ப மணி 8 ஆவுது. இன்னும் வவுத்துக்கு ஒன்னியும் திங்கக்கூட இல்ல..  எம்பட ராசா  அதும் மூஞ்சியைப் பாரு பாவம், செவனேன்னு எப்புடி கெடக்குன்னு, போ.. சாமி. போய் கைகால் கழுவிட்டு வா ராசா.. சோறு திங்கலாம்.. “

இனிய பொங்கல் வாழ்த்துகள்!



அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே!! எங்கும் மங்கலம் பொங்குக! 



உழவர் பெருமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!!



நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!! (அபிராமி அந்தாதி)





அன்புடன்
பவள சங்கரி

Saturday, January 11, 2014

சிதையா நெஞ்சு கொள்!


பவள சங்கரி
சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.
bharathy 1

Friday, January 3, 2014

யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு



அன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​



--

Thursday, January 2, 2014

தென்றல் இதழில் சொந்தச் சிறை


பவள சங்கரி

புத்தாண்டுப் பரிசாக அமெரிக்காவில் வெளியாகும்  தென்றல் இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. இருக்காதா பின்னே.. என் பல சொந்தங்கள் இரத்த பந்தங்கள் எல்லாம் அமெரிக்கவாசிகள்! அவர்கள் கையில் இருக்கும் தமிழ் இதழில் என் கதை வந்தால் அவர்களுக்கும், எனக்கும் மகிழ்ச்சிதானே..  கதையை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொண்ட தென்றல் ஆசிரியர் குழுவிற்கு நன்றி பல.

சொந்தச் சிறை முழுமையாக வாசிக்க இங்கே 


வங்காளத்தின் இராணி பவானி



பவள சங்கரி 


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான். 



Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு 2014!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!!

அன்புடன்
பவள சங்கரி

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...