பவள சங்கரி
”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி.. ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா நொந்து போச்சு சாமீ. டாக்டரு கண்டமேனிக்கு வையுறாரு. இனிமேல்பட்டு மேசன் வேலைக்கு போவக்கூடாதாம். அப்புடி ஒரு வியாதியாம் எனக்கு. அதுக்கும் மீறி போனா அப்புடியே போய் சாவு, என்னாண்ட திரும்பி வராதேங்கறாரு. எனக்கு மட்டும் என்ன அந்த கல்லு, மண்ணுல ஓயாம வேல செஞ்சி எப்பப் பார்த்தாலும் இருமலோட திரியணும்னு ஆசையா? பாக்கறவனெல்லாம், பரிதாபமா ஏண்டா இன்னும் வேலைக்கு வறேன்னு கேக்கறானுவ.. இருமல் நிக்காம வருது. அப்பப்ப சளியோட ரத்தமும் வருதுல்ல, அதான் பய புள்ளைக பயந்து போவுதுக. நாளமின்னிக்கி இங்க வந்து உழுந்து கிடந்தா உன்னய எவன் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போறதுன்னு மேஸ்திரி கண்டபடிக்கு திட்டறான். இனிமே வேலைக்குப் போவ முடியாது. வேணுமின்னா வெளிய காய்கறி கடை போட்டு ஒக்காந்துக்கறன். அதுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்ணுனா தேவலப்பா. மனசில இருக்குற தெம்பு உடம்புக்கு இல்லியே, நான் என்னத்ததான் செய்யட்டும். 10 வயசுல காரச்சட்டி தூக்குனவன், இந்த 40 வருசமா காரையில கிடந்து குடலெல்லாம் வெந்து கெடக்குது”
“இந்தா.. ஏன் இப்புடி புலம்பற. செத்த நிறுத்து. பையன் பாவம் இப்பத்தான் அலுத்துப்போய் ஊட்டுக்கு வந்திருக்கு. வந்ததும் உன் ராமாயணத்தை ஆரம்பிக்கிற. என்னா மனுசன்யா நீ? அது பாவம் காலைல 7 மணிக்கே தின்னும், திங்காம ஓடுச்சி. இப்ப மணி 8 ஆவுது. இன்னும் வவுத்துக்கு ஒன்னியும் திங்கக்கூட இல்ல.. எம்பட ராசா அதும் மூஞ்சியைப் பாரு பாவம், செவனேன்னு எப்புடி கெடக்குன்னு, போ.. சாமி. போய் கைகால் கழுவிட்டு வா ராசா.. சோறு திங்கலாம்.. “




