Tuesday, May 27, 2014

சித்த சோரன்

பவள சங்கரி




ரோகிணியில் பிறந்த ரோசக்காரப்பிள்ளையவன்
திட்டுவாங்கினாலும் திருந்த மாட்டானவன்
செவியில் கட்டெறும்பாய் நுழைந்து
செல்லக் குறும்புகள் புரிந்திட்டானவன்
கண்ணைப் புரட்டி விழித்தாலும்
வண்ணம் பரப்பி வறுத்தெடுப்பானவன்
நன்மாலைகள் ஏந்தி நர்த்தனம் புரிந்தாலும்
நடுவானில் நின்று கூத்துகள் பலப்புரிபவன்
விளையாடு புழுதியோடு பூரித்திருப்பவன்

Saturday, May 17, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (5)







நீ சிந்தும் சோகக் கண்ணீர் முத்துக்களே,  கெக்கலித்தல்  மற்றும் உரத்த பரிகாசச் சிரிப்பைக் காட்டிலும் இனிமையானவை!

வைராக்கியம் என்பது ஓர் எரிமலை. அதன் உச்சியில் உறுதியின்மை என்ற பசும்புல் முளைக்காது!

’கையளவு கடற்கரை மணல்’ - கலீல் ஜிப்ரான்

Thursday, May 15, 2014

ஆத்ம இராகம்! (இலக்கியப் பூக்கள் -10 அகில உலக வானொலி)


பவள சங்கரி



மெல்லத் திறந்ததென் அகக் கண்கள்!
பசுமையாய் விரிந்த காட்சிகள் .
அம் மெல் அல்லி பூத்த தாமரைத் தடாகம்!

 கொத்துக் கொத்தாய் பூத்துக்குலுங்கும்
 சூல்கொண்ட குறுஞ்செடிகளின் சூழ்தல்
நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்….

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...