Saturday, June 14, 2014

தந்தை ஒரு சீனத்துச் சுவர்!

பவள சங்கரி





தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது  அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன். 

Tuesday, June 10, 2014

ஓடும், செம்பொனு மொக்கவே


பவள சங்கரி



சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
  ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
         கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
          வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

     குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்; 

இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும்  அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட  விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.

Tuesday, May 27, 2014

சித்த சோரன்

பவள சங்கரி




ரோகிணியில் பிறந்த ரோசக்காரப்பிள்ளையவன்
திட்டுவாங்கினாலும் திருந்த மாட்டானவன்
செவியில் கட்டெறும்பாய் நுழைந்து
செல்லக் குறும்புகள் புரிந்திட்டானவன்
கண்ணைப் புரட்டி விழித்தாலும்
வண்ணம் பரப்பி வறுத்தெடுப்பானவன்
நன்மாலைகள் ஏந்தி நர்த்தனம் புரிந்தாலும்
நடுவானில் நின்று கூத்துகள் பலப்புரிபவன்
விளையாடு புழுதியோடு பூரித்திருப்பவன்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...