Thursday, July 27, 2017

INDIA/ V – Stone, water, birds and beasts


கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

 
கல், நீர், பறவைகள், மிருகங்கள்

கல், நீர், பறவைகள், மிருகங்கள்
மற்றும் மக்களும் கூட
இம்மண்ணில் தகிக்கும் கோடை வெப்பத்தில் வாடுகிறார்கள்.
இருப்பினும் தீவிர பதட்டம், தேவையற்ற கவலைகள்
மற்றும் சீற்றமும் கூட
அனைத்தும் வெகுகாலம் முன்பே ஆழங்காணவியலாத 
இம்மண்ணின் ஆழத்தில் புதையுண்டிருக்கிறது.
மரங்கள் வண்ணவண்ண மலர்களையும் தீஞ்சுவைக் கனிகளையும்
விளைவித்து பசுமையான இலைகளால் ஆடைசூடி உயர் வானையும் முத்தமிடுகின்றன.
கனிகள் கனிந்தும் மொட்டுகள் மலர்ந்தும்
பறவைகள் பறந்தும் மிருகங்கள் ஓடியாடியும்
மற்றும் இதே எளிமையுடனும் தன்னிச்சையுடனும்
மக்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்து மரிக்கிறார்கள்.


தாகூர்


Friday, July 21, 2017

INDIA /IX - Observing an Ox, I reflect - எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்





கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் - சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி



விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாக தங்கிவிடுதலல்ல.

மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

பூமியில்லாத வானமும் இல்லை,
வானமில்லாத பூமியும் இல்லை.

ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

பாரம்பரிய பாதுகாப்பு



நல்ல பழக்கங்களை பரம்பரைப்பழக்கம் என்ற பெருமையோடு வழித்தோன்றல்களுக்கு பயிற்றுவிக்கும் அதே வேளையில் இடைச்செருகலான தீய பழக்கத்தைக் கண்டறிந்து அதை வேருடன் களைந்தெறிவதில்தான் பாரம்பரியப் பாதுகாப்பு உள்ளது! 
#வாழ்க்கை

Monday, July 10, 2017

INDIA IV - Bus stops a while




கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக்
ஆங்கில மூலம் : கிம் யாங் - ஷிக்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி



பேருந்து நின்ற சில மணித்துளிகள்


தெரு முனையில் சில மணித்துளிகள் நிற்கிறது பேருந்து.
சாளரத்தினூடே ஓர் சிறுவனைக் காண்கிறேன்
ஒருகை வேர்க்கடலை நிரப்பிய கூம்புவடிவ காகிதப் பொட்டலத்தைப் பிடித்திருக்கிறான்.

மின்னும் விழிகளுடன் என்னை நோக்கி வந்தவன் 
தனது பண்டங்களை நான் வாங்க விரும்பினான்.

பேருந்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன், என் மனம்
வெறுமையானதோடு ஆன்மாவும் தொலைந்தது
வளி பலரை ஒரு யுகத்திற்கே அடித்துச் சென்றுவிடுகிறது.


வாழ்கணக்கு!



கணக்குப்போட்டு வாழ்வதில் நிம்மதியாம்
அரைப்புள்ளி கால்புள்ளியாய் குழப்புவதெல்லாம்
 முற்றுப் புள்ளியில் தெளிவாகிவிடுகிறது
பெருகுவதெல்லாம் காழ்ப்பும் கயமையும்
கழிவதெல்லாம் அமைதியும் அருங்குணமும்
வகுப்பதெல்லாம் வரவும் வழக்கும்
கூட்டுவதெல்லாம் குழப்பமும் வஞ்சகமும்
கணக்குப்போட்டே கழிந்துவிடும் காலம்
மிஞ்சுவதெல்லாம் சிவமும் சித்தமும்
எஞ்சிய வாழ்க்கையின் கணக்கும் 
வஞ்சமிலா நோக்கமும் ஆக்கமும்
உறவும் பிரிவும் வரவும் செலவும்
தஞ்சமென தவமும் தயாளகுணமும்!
பஞ்சமில்லா அன்பும் பாசமும்!!

Sunday, July 9, 2017

குரு பூர்ணிமா!





குருவுடனான உங்கள் பயணம்
அறியாமையெனும் அந்தகாரத்தை ஒழித்து
ஒளியினூடேயானதொரு உன்னத பயணம்.
உங்கள் வாழ்வின் பிரச்சனைகளப்
புறந்தள்ளி வாழ்வின் உன்னத அனுபவங்களை
நோக்கி முன்னேறுங்கள்!
குரு பூர்ணிமா வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...