Monday, June 14, 2021
Thursday, May 6, 2021
மனச்சுமை
தீநுண்மி தற்காப்புக்கு
தடுப்பூசியே சரணாகதி
முடிவாயிற்று
உயிர் வாழும் ஆசை.
வியர்வையுமில்லை சிறுவாடும் இல்லை
பசியும் நோயும் தொல்லை
சிறுசுகளைக் காக்கவேணும்
போடணும் தடுப்பு ஊசி
என்போர் ஆயிரமாயிரம்
அவர்களுக்கானதுதானே
அரசு மருத்துவமனையின்
இலவச சேவைகள்!
என்கையில் கொஞ்சம் சேமிப்பும்
கணவன் மகனின் அரவணைப்பும்
இருக்கும் நம்பிக்கையில் முதல்
தவணை தனியார் மருத்துவமனையில்
மறுதவணைக்கு போட்டிபோட வாய்க்காத
பிரிதொரு பொழுதின் நிர்ப்பந்தத்தில்
அரசு மருத்துவமனை நோக்கிய
பார்வையில் குத்தீட்டியாய் வரிசை
ஒழுங்குபடுத்தி உள்ளனுப்பும் இளைஞி
தனியார் மருத்துவமனை சென்றுவந்த
தருக்கில் இருப்பதாய் தப்புக்கணக்கில்
வந்தவரையெல்லாம் தனி வரிசையில்
ஒதுக்கியவளின் பார்வையில்
வன்மத்தின் ரேகைகள் தாராளமாய்
மணிக்கணக்கில் காக்க வைத்து
வஞ்சம் தீர்த்தவளின் மனம்
இரங்கவேயில்லை.
இறுதிவரை புரியாத புதிராகவே
விடைகொடுத்த அவள் என்நிலையை
உணரவுமில்லை
என் மனச்சுமையை இறக்க இடம்
கொடுக்கவுமில்லை.
Tuesday, April 27, 2021
Friday, April 9, 2021
Monday, March 22, 2021
Saturday, March 20, 2021
Thursday, March 11, 2021
கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் ...
மன உளைச்சலை உண்டாக்கும் முரண்பாடான சூழலை சமன்படுத்தும் மாபெரும்
உபாயமாக இருப்பது இசை. இன்னொலியின் இனிமையுடன் உருவாக்கப்பட்ட
இசை அந்த சமன்பாட்டை வழங்குவதன் மூலம் சமூக வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றுகிறது. ஆற்றல்
நோக்கு, ஆன்மிக நோக்கு போன்ற படிநிலைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. அந்த வகையில்
ஒரு சில பாடல்கள் நம் மனதினூடே நுழைந்து உயிரோடு கலந்தும் விடுகிறது. எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பதுமில்லை. அப்படி ஒரு பாடல்தான், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், ‘யார் யார்
சிவம், நீ, நான் சிவம்’ என்ற பாடல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசை உலகில் தென்றலாக
வலம்வர ஆரம்பித்து 40 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக 40 பேரைத் தேர்ந்தெடுத்து 40 பாடல்களுக்கான விளக்கத்தைத்
தொகுத்து நூலாக வெளியிட்டு பாராட்டியிருக்கிறார்கள். எனக்கும் இதில் ஒரு வாய்ப்பு அமைந்ததால்
என் விருப்பப் பாடலைப் பற்றி வரைந்திருக்கிறேன் நானும் … படித்துப் பார்த்து கருத்து
சொல்லுங்களேன் .. நன்றி.
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...






