Wednesday, May 25, 2016

நிறமிலி!




நிறைபொருளாய் இருக்கும் அனைத்தும் நீலமாகிறது
நிறைகடல் நித்தமும் நீலவாடை சூடுகிறது
வெட்டவெளி ஆகாய நீலமேனி மதிமயக்குகிறது
விண்ணிலும் மண்ணிலும் நீலமெங்கும் பூத்திருக்கிறது
எல்லாம் நீலமயமாய் ஆனாலும் கானல்நீராகிறது
வர்ணமேதும் இல்லாத நிறமிலிதான் அனைத்தும்! 
நிறமிலிகள் நிதம் வண்ணச்சூட்டில் வடிவமைப்பினும்
நிசமெனும் நீச்சம் நிறைவானில் வடிகாலாகிறது!


No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...