Thursday, October 13, 2016

சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை


சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

Saturday, October 8, 2016

சோதிவடிவே! சுடரொளியே!





ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின்  சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்

Friday, October 7, 2016

வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி









தேவையான பொருட்கள் :


வெந்தயக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு  - 1/4 கப்
குதிரைவாலி மாவு - 1/4 கப்
கம்பு, சோளம் மாவு - 1/4 கப்
திணை அரிசிமாவு  - 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
சீரகத்தூள்  - 1/2 தே.க
கொத்தமல்லி தூள் - 1/2 தே.க
தூள் உப்பு   - 3/4 தே.க
மஞ்சள் தூள்  - 1/2 தே.க
தயிர்    - 5 தே.க
தேவையான அளவு எண்ணெய்

மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீருடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். வட்ட வடிவில் சப்பாத்தியாக இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து, சுருட்டி அடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வெந்தயக்கீரை  பலதானிய ரொட்டி தயார். பன்னீர் பட்டர் மசாலா அல்லது காய்கறி குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Thursday, October 6, 2016

INDIAN TEMPLES - கற்பக நாயகி - திருக்கருகாவூர்

ஓம் மகாசக்தியே போற்றி!



பவள சங்கரி

எத்தனை எத்தனை பிறவியம்மா
எல்லாம் உன் அருளம்மா
அத்தனையும் பாவங்களன்றி
வரமாக்கிய வடிவுடைநாயகியே
நாடகமான வையகத்தில்
பூடகமான மனமின்றி
சேடகனாய் வாழாமல்
சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...