Monday, June 23, 2014

கவியரசு கண்ணதாசன்


இன்று கவியரசரின் 88 வது பிறந்த தினம். ”நான் நிரந்தரமானவன். எனக்கு அழிவென்பதில்லை” என்று அவரே கூறியுள்ளது போல இன்றும் நம்முடன் தம் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை இது. அவர் உடல் நலமின்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது,  அவரை நலம் விசாரிக்க  அமெரிக்க வாழ் தமிழர்கள் வந்திருந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத் தெரி்யாது என்பதை அறிந்த கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அக்கவிதையே கவியரசர் எழுதிய கடைசி கவிதையும் என்கிறார்கள்.  இதுதான் அந்தக் கவிதை.



Sunday, June 22, 2014

கவிக்குயில் சரோஜினி நாயுடு - உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

பவள சங்கரி



புவியெங்கும்  நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர்,
கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ
இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள்.

ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு,
சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ
 உன் விடிவெள்ளியின்  பொன் மாங்குயில்  காட்சியன்றோ!

Saturday, June 21, 2014

பொன் சிறகு

பவள சங்கரி






பெரிய பெரிய ஆசைகளைப் 
பக்குவமாய் பறைசாற்றுவதில் 
பாதகமொன்றுமில்லை.

பாடுபொருட்கள் பரவசமாய்
பரிந்துரைத்தால் பாவலனுக்கு
பரமானந்தம்தான்!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...