Sunday, September 11, 2011

பாட்டுக்கொரு புலவன்!

பவள சங்கரி

பாட்டுக்கொரு புலவனவன் , புலமையின் முன் செல்லியும், சேக்ஸ்பியரும் எம்மாத்திரம் என எக்காலமும் வியக்க வைக்கும் நம் முண்டாசுக்கவி இன்று உடலால் மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகை விட்டு மறைந்த நாள்.  தம் தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்ததோடு, அரசியல், தத்துவம், ஆன்மீகம், சமூகம், காவியம் என அக்கவி நுழையாத துறையே இல்லை எனலாம். முற்போக்குச் சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடிய படைப்புகளின் தலைவனவன்!  ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் ஞானம் கொண்டு தமிழ் மொழியின் கவிதைகளுக்கு வல்லமை கூட்டினான் என்றால் அது மிகையாகாது.
1908 ஆம் ஆண்டு, இந்தியா இதழ் மூலம் ஆங்கிலேய ஆதிக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பி, அது காரணம் கொண்டே, ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய முனைய, பிரெஞ்சு அரசின் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்ற கதாநாயகன் இவன்…..
தேசீய கீதங்கள் – பாரத நாடு – வெறிகொண்ட தாய்
ராகம் – ஆபோகி , தாளம் – ரூபகம்
1.     பேயவள் காண்எங்கள் அன்னை-
பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்தியபித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை.     (பேயவள்)
2.     இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
3.     தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
4.     வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்.     (பேயவள்)
5.     பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.     (பேயவள்)


தேசீய கீதங்கள்சுதந்திரம்
27.சுதந்திரப் பயிர்
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?     1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?     2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?     3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ?     4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?     5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?     6
மாதரையும் மக்களையும் வன்கண்மை
யாற்பிரிந்துகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?     7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?     8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?     9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயாதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?     10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?     11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?     13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?     14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே 15
_தம் ஞானப் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய மாகவி பாரதி!
ஞானப் பாடல்கள்
96. அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
78. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
1905 ஆம் ஆண்டு வ.உ.சியுடன் தொடர்பு கொண்டு அரசியலில் தீவிரமாக நுழைந்து, காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கல்கத்தா சகோதரி என்றழைக்கப்பெறும் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதாவைச் சந்தித்து, அவர் கொள்கைகள்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரைத் தம் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
_4. சான்றோர்
28. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
பாரதியின் தீஞ்சுவைக்கனியின் சுவையென, கண்ணன் பாடல்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். கண்ணனைத் தம் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், அரசனாகவும், சேவகனாகவும், சற்குருவாகவும்,சீடனாகவும், குழந்தையாகவும், காதலனாகவும் – பல கோணங்களில் ரசித்து, அன்பு சொரிந்து கவி புனைந்திருப்பது எக்காலத்தும் சுவைத்து மகிழக்கூடியதாகும்.
முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு
15. கண்ணன்-என் காந்தன்
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!
குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!
1. கண்ணன் பாட்டு
16. கண்ணம்மா-என் காதலி 
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!
சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!வாலைக் குமரி யடீ,-
கண்ணம்மா!மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-
இது பார்.கன்னத்து முத்த மொன்று!

மகாபாரதத்தின் நாயகி, பாஞ்சாலியின் சபதம் குறித்த பாரதியின் கவிதைகள் இரண்டு பாகங்களாக சுவைத்து அனுபவிக்கும் வண்ணம் புனையப்பட்ட கவிதைகளாகும்.
2. பாஞ்சாலி சபதம்
சபதச் சருக்கம்
65. திரௌபதி சொல்வது
‘சாலநன்கு கூறினீர்! ஐயா!
தருமநெறிபண்டோர் இராவணனும்
சீதைதன்னைப் பாதகத்தால
கொண்டோர் வனத்திடையே
வைத்துப்பின்,கூட்டமுறமந்திரிகள்
சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி
யுரைத்திடுங்கால்“தக்கது நீர் செய்தீர்;
தருமத்துக் கிச்செய்கைஒக்கும்”என்று,
கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாடவற்புறுத்திக்
கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவிகரைந்திடுதல் கண்டே,சில மொழிகள்
பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான்,
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்;-அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும்
மாயட நகர்த்த துச்சாதனன்-அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி
எழுந்தது வெஞ்சினம்;-
துய்கூடித் ததருமனை நோக்கியே,-
அவன்கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

மனைவியின் பிறந்த ஊராகிய கடையத்தில் 1918 – 20 களில் அமைதியாக வாழ்க்கை நடத்திய க்வி, 1920ல் மீண்டும் சென்னையில் உள்ள சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1919ல் சென்னையில் உள்ள திரு.சி.இராசகோபாலாச்சாரியின் இல்லத்தில் மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். 1921. ஆகஸ்ட் மாதத்தில் திருவல்லிக்கேணி கோவில் யானை தன் துதிக்கையால் தள்ளிவிட, மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாலும்,அந்த மாதமே, 12 ஆம் நாள் விடியற்காலை 1.30 மணியளவில் தமது 39 ஆவது வயதில் இயற்கை எய்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

எவ்வம் - கலீல் ஜிப்ரான்

நொந்த மனம் கொண்ட பேதையொருத்தி எவ்வம்’ பற்றி பகல்வீர் ஐயனே என  வேண்டினாள் !

பகன்றாரே பலவும் சிந்தையதுவும் விழித்தெழ:

உம் புரிதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கூட்டை உடைத்தெறியும் உசாத்துணை உம் எவ்வமே அம்மணி!

கனிந்து நிற்கும் கனியாயினும் ஞாயிறொளியில் இதயத் தாமரை மலர ஓட்டை உடைத்தெறியும் எவ்வம் பொறுக்க வேண்டுமே!

 வாழ்வின் அன்றாட அற்புதங்களை வியப்புடனுறைந்து  உம் இதயக்கூட்டில் அணைக்குங்கால், உம் இன்பத்திற்கு இம்மியளவும் குறைவிலா அதிசயத்தையும் தோற்றுவிக்க வல்லதந்த எவ்வமன்றோ?

உம் வயல் வெளியில் கடந்து போகும் கால மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றே உம் இதய வெளியின் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள இயலும் உம்மால்!

உம் துயரங்களின் நடுக்கங்களின் (குளிர்) ஊடே பொறுமையாக கவனம் கொண்டு நோக்கினால் உம்முடைய பெரும்பான்மையான துயரங்களுக்கான காரணமே உன் சுய - தேர்வு  மட்டுமேயன்றோ?

உம்முள் இருக்கும் வைத்தியன் அளிக்கும் மருந்து கசப்பானதாக இருப்பினும் அதுதானே உம் பிணியைப் போக்கும் உபாயம்?

ஆம், அந்த வைத்தியன் மீது நம்பிக்கை வை முழுமையாக! அத்தோடு அவனளிக்கும் கசப்பான தீர்வையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் பருகி விடு!

அவன் கையில்  பலமும், உறுதியும் ஓங்கி இருப்பினும்,  மற்றொரு மாயக் கை ஒன்று மென்மையாக ஒரு மலர்பாதை விரிக்கும் உனக்கு!

அவன் அளித்த அக்கோப்பை உன் மென்மையான இதழைப் பதம் பார்த்தாலும்,

குயவனால் தம் புனிதமான கண்ணீரால் வார்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டதன்றோ அக்கோப்பை?


http://www.youtube.com/watch?v=AVx6H68Siww&feature=related