Tuesday, July 28, 2015

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த பழைய வீடு!






நம் நாடு இன்று இளைய சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கை இழந்து தவிக்கிறது. மக்கள் அனைவரும் தம் சொந்த குடும்பத்தின் ஒரு முக்கிய இழப்பாகவே எண்ணி வேதனைப்படுகிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமலா இருக்கும்.. தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாத தன்னலம் கருதாத தவமுனி நம் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.. 2004ம் ஆண்டில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் எரிந்து, அதில் பல சிறார்கள் உயிர் விட்டது நினைவில் இருக்கலாம். அந்த நேரத்தில் நம் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த ஐயா அப்துல்கலாம் அவர்கள் தினமணி நாளிதழில் கும்பகோணத்தில் தீயில் கருகிய அக்குழந்தைகளைக் குறித்து எழுதிய கவிதை இது.

கலங்கரை விளக்கு ஒளியிழந்தது!



ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவச் செல்வங்களுடன் ஒரு கருத்தரங்கில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நம்முடைய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி, ஒளியூட்டிக்கொண்டிருந்த தீபம் நம்மை விட்டு விலகியது தாங்கொணாத் துயரம் அளிப்பது. கனவு காணுங்கள் என்று இளைய சமுதாயத்தினரை ஊக்கப்படுத்திய ஐயா இப்படி எங்களை தவிக்கவிட்டு செல்ல எப்படி மனம் வந்தது…
டாக்டர் கலாம் அவர்கள் நம் இந்தியத் திருநாட்டின் 11வது குடியரசுத் தலைவராக, 2002 முதல் 2007 ம் ஆண்டு வரை தன்னலமற்ற தொண்டு புரிந்தவர். ராமேசுவரத்தில் அக்டோபர் 15, 1931 இல் ஒரு படகுக்காரருக்கு மகனாக அவதரித்தவர். கலாம் அவர்கள் பத்மபூஷன், பாரத ரத்னா ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

அடியாரும், ஆன்மீகமும் (3)



பவள சங்கரி
அடியார்கள் எந்த நிலையிலும் மனம் கலங்கி நிற்கமாட்டார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ஒன்றேபோல் பாவித்து அன்பும், பக்தியும் தம் இரு கண்களென வாழ்க்கை நெறியில் சற்றும் தடம் புரளாமல் வாழ்ந்து காட்டுபவர்கள். எக்காலத்தும், எஞ்ஞான்றும் சிவபிரானை வழுவாமல் வாளாக் கிடந்து வாடி நிற்கமாட்டார்கள்.

Monday, July 27, 2015

அடியாரும் ஆன்மீகமும் (2)


பவள சங்கரி
1382426_823390031082957_239293274964935666_n
12914_823390161082944_8842537095226880754_n
ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

Sunday, July 26, 2015

அடியாரும், ஆன்மீகமும்!



 ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான்,

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.