Friday, July 26, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (20)


பவள சங்கரி

துக்கத்தை சுமையென ஒதுக்க முடியுமா?



“தோல்வி, வேதனை , போராட்டம், இழப்பு, அதள பாதாளங்களிலிருந்தும் மீண்டு வரும் வழி போன்றவற்றை அறிந்தவரே, நாம் அறிந்தவர்களிலேயே மிக அழகான மனிதர்கள். இந்த மனிதர்களே,  பாராட்டு, உணர்திறன் மற்றும் கருணை, கனிவு, ஆழமான அன்பு போன்றவைகள் நிறைந்ததொரு  புரிதலான வாழ்க்கையை வாழ்பவர்கள். அழகான மக்கள் சட்டென்று தோன்றுவதில்லை”.
எலிசபெத் குப்ளர் ராஸ்

Monday, July 22, 2013

மெய்கண்டார்




பவள சங்கரி

டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “
என்னடா ஆச்சு திடீர்னு
என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு, அப்பறம் என்ன கேக்கணுமா..”
கோர்ட் வாசலின் எதிர்ப்புறம் மரத்தடியில் உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்த செண்பகத்தை போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர். பொது நல சங்கங்களும், மற்ற பெண்கள் நல அமைப்புகளும் விசயம் அறிந்து வந்து சேருவதற்குள் எப்படியாவது செண்பகத்தை விரட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலீசார். ஆனால் அவர்கள் பயந்தபடியே நடந்துவிட்டது. மூக்கில் வியர்த்தது போல எல்லோரும் ஆஜர் ஆகிவிட்டார்கள்.