Saturday, December 7, 2013

இருண்ட இதயம்



பவள சங்கரி


"விடுங்க .... ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி.  

“தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?.  அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ”  கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது!

“அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க..  நான் போய்விட்டு வாறன்” 

“என்ன தமிழினி, உன்னுடைய உடம்பு இப்படி நடுங்குது..?”

“உங்கட நாடி மட்டும் என்னவாம்? இப்படி துடிக்குது?” கடைக்கண் பார்வையினால் சொக்கி விழச் செய்தாள் தமிழவனை!. 

“தமிழினி, நாளை நான் வாறேன் அங்கே” அவன் கண்களில் பொங்கிய ஆர்வம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“இங்கே ஒரே ஆட்கள்... கதைக்கவும் ஏலாது.  பாலன் அண்ணைக்கு சாடையாக விளங்குது போலத் தெரியுது..”

“ஓமோம்.. என்னட்டையும் கேட்டவ.. நான்.. சீ.. இல்லை எண்டு சொல்லிப் போட்டன்”

”ம்ம்... என்ன.. அப்படி ஒண்டுமில்லையோ?” லேசான செல்லக்கோபம்!

“அப்ப என்ன...  நடுத்தெருவுல நிண்டு சத்தம் போட்டு உண்மையச் சொல்லட்டோ?” சிரித்தான் குறும்பாக.

அவள் அவசரமாக மறுத்துத் தலையாட்டினாள். 

Friday, December 6, 2013

பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்



பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

பவள சங்கரி திருநாவுக்கரசு

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2013/12/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Ed0QwAiBgn0


நம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால்  பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது. 

இத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி.  அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம். 

Friendship Forever!



 Pavala Sankari



Words could never tell you
How fruitful friendship always be,
Just little words that come out
That are heavenly meant
That maketh the heart smile
That maketh the life worthwhile!

Brushing up the tears as well as
Picking up from the pool of confusion
Sinking in sadness avoided by consoling
Mending up the broken heart with feather
Blowing out the heartbreak away and
Turning out the world upside and around!!


Even though the past is past untold
Future will be fantastic humanity
Even though not able to keep the
Feet from stumbling could get a hand to
Grasp and save from not to fall deep
When in need of care warm hands spread

Decision making may depends
Encouraging ever supports
Boundaries never be determined
Could give the room to grow by himself!
And accept him as he is himself!
Could pick up the pieces to put back in their own!
Glad and sad times all passes through easily!


Friend is like a halcyon with the power to calm winds of the sea
Friend is like an owl who is wise and beautiful
Friend is like a flower who is soft and silky
Friend is like an angel of love who is in disguise
Friend is like a heart which bears everything
Friend is like a heaven where you can rest peacefully!!!



Thanks : Vallamai

Wednesday, December 4, 2013

காளான் பூத்த கல்மரம்




பவள சங்கரி

என்ன பெயர் இதற்கு?
எத்தனை யுகங்கள் தொடர்கிறது இது?
எவ்வளவு யுகங்களாகக் கூடிக்கொண்டிருக்கிறது?
அன்பு ஆயுளைக்கூட்டும் அருமருந்தாமே?
முந்து கேம்பிரிய ஊழியில்  மெல்ல உயிர்த்ததுவோ?
உயிரற்ற உறழாய்த் தோன்றிப்பின் உயிர்க்கலனாய்
உருவெடுத்துப் பல்கிப்பெருகிய காலந்தொட்டு
 கேம்பிரியக்காலத்திலும் தொடர்ந்ததுவோ?

Sunday, December 1, 2013

You Made It!!!


Pavala Sankari


Becareful with my heart

as it pains much due 

wired with confusions
win-now from partition thorns


Neednot be worried
Of yours being in a pool
Full of lilly blossoms
Embosomed with Cool breeze