Monday, April 22, 2019

மக்களாட்சி?

பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகளை ஒட்டியே நம் இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய அரசும் உள்ள இங்கிலாந்தில், தேர்தலில் எந்தக் கட்சியும் அருதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், மற்ற கட்சிகளோடு இணைந்து தேசிய அரசு அமைக்கப்படும். இதில் முக்கியமான விசயம் குதிரை பேரத்திற்கு வாய்ப்பு கிடையாது. அந்தந்த கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதிலும் தனி நபர்களை விட அந்தந்தக் கட்சியே கருத்தில் கொள்ளப்படும். இங்கிலாந்தில் போர்க்காலங்களிலும், அவசரக் காலங்களிலும் இது போன்ற அரசுகள் உருவாக்கப்படுகின்றன. 

நம் நாட்டில் ஒருவேளை மக்கள்  தொங்கு பாராளுமன்ற அமைப்பை விரும்பிவிட்டால் நமது அரசின் நிலை என்னவாக இருக்கும்? அதாவது எந்தக் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் போனால் தொங்கு பாராளுமன்றம் அமையும்! பின்  குதிரைப் பேரம் தான் நடக்கும். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், அதை உடைத்தும், சிறு கட்சிகளை விலைக்கு வாங்கவும் திறமையுள்ளவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள். இது மக்களாட்சியின் சரியான நிலையா?
#டவுட்டு