Saturday, June 14, 2014
Tuesday, June 10, 2014
ஓடும், செம்பொனு மொக்கவே
பவள சங்கரி
சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்;
இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும் அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...