Thursday, December 21, 2017

தமிழ் இசைக் கல்வெட்டு


கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!
isai1
isai
ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.
IMG_20171221_132623484
இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
IMG_20171221_125239428
பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.

Monday, December 18, 2017

தட்டைப்பயறு பொங்கல்




வெயிட் குறைக்க அருமையான சத்துணவு






அரிசி / குதிரைவாலி / சாமை / கம்பு / சோளம்  இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கப் எடுத்தால், கால் கப் தட்டைப்பயறு எடுத்துக்கொள்ளலாம். முதலில் அரிசி அல்லது மற்ற சிறுதானியங்களில் ஏதும் ஒன்றோ அல்லது கலந்தோ எடுத்து தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கலாம். தட்டைப் பயிறை நன்கு சிவக்க வறுத்து அதை குக்கரில் 4 /5 சத்தம் வரவிட்டு நன்கு வேக வைத்துக்கொள்ளவும். 

வெங்காயம், 2 பச்சை மிளகாய், 2 தக்காள், சுரைக்காய் விரும்பு அளவு எடுத்து அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
மிளகு 1 தே.க., சீரகம் 1 தே.க. , பூண்டு 7/8 பல். நான் நாட்டு பூண்டு பயன்படுத்துவதால் 8/10 போடுவேன். சைனா பூண்டு என்றால் அளவை குறைத்துக்கொள்ளலாம். வரமிளகாய் 6, கருவேப்பிலை 1 கொத்து அனைத்தையும் மிக்சியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.

பின் ஒரு வானலியில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, பொடித்த பொடியும் போட்டு, வெங்காயம், தக்காளி, சுரைக்காய் அனைத்தும் போட்டு நன்கு வதக்கி வெந்த தட்டைப் பயிறில் கொட்டி, அதில் ஊறிய தானியத்தையோ, அரிசியையோ போட்டு, தேவையான அளவு உப்பு, மூன்று கப் தண்ணீர், (தட்டைப் பயிர் வெந்த தண்ணீருடன் சேர்த்து) அனைத்தையும் குக்கரில் வைத்து நன்கு குழைய வேக வைத்தால் சுவையான  தட்டைப் பயறு பொங்கல் தயார்!