Thursday, September 6, 2012

ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்!





கேப்டன் லட்சுமி சேகல் (1914 - 2012



கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் பெற்றவர். சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் என்ற தகுதியும் பெற்றவர். தாய் ஏ.வி.அம்முகுட்டி, ஒரு சமூக சேவகி. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகவும், மிகுந்த சமுதாய நலம் மிக்கவராகவும், சுதந்திரப் போராட்டத்தில் செயல் வீராங்கனையாகவும் இருந்தவர். கேரள மாநிலத்தின் பாலக்காடு நகரின்,  பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலட்சுமி சேகல் லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் பள்ளியில் தம் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1930ல் இராணிமேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1938ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பின்பு பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவ பட்டச்சான்றிதழ் (diploma) பயின்றார். மருத்துவக் கல்வியுடன், அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டிலும் பங்கு கொண்டிருந்தார். ஆனால் லஷ்மியோ, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அதிரடி அரசியலில் ஈர்க்கப்பட்டார்.

கதையே கவிதையாய்! - வழி





 வழி - கலீல் ஜிப்ரான்

குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை.
  மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால்.
  அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள்  அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும்  அமைதியாக்கியது எது?” என்று பதறினாள்.
  அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்என்றார்.
  மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் காய்ச்சல்?” என்றாள்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

செப்டம்பர் 4 என் பிறந்த நாள் என்பதை என்னைவிட எம் உயிருக்குயிரான நட்புகள் அறிந்து வைத்திருப்பதுதான் ஆச்சரியம். இந்த முறை என் பிறந்தநாளை மறக்கவே முடியாமல் செய்துவிட்டனர் நம் இணைய நடபுக்கள்.   அமைதிச்சாரல் சாந்தி எப்படியோ கண்டுபிடித்து முகப்புத்தகத்தில் கேக்கும், பொக்கேவும் கொடுத்து வாழ்த்த , ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தில் ஈரோடு கதிர், பவள சங்கரி அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஆரம்பிக்க மளமளவென நம் ஈரோடு சொந்தங்கள் வாழ்த்துக்களை குவித்துவிட்டனர்.  அடுத்து, எண்ணங்களை அன்பு வண்ணங்களாக வழங்கிக் கொண்டிருக்கும்  கீதாஜி குழுமங்களில் அறிவிக்க, இணைய நட்புக்களின் வாழ்த்து மழையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும். பிறக்கும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை.  போகும் போதும் எதையும் உடன் எடுத்துச்செல்ல முடியாது. இந்த இடைப்பட்ட காலத்தில் நல்ல அன்பையும், நட்பையும் சம்பாதிப்பது எத்துனை பெரிய தவம் என்பதை உணர வைத்த பிறந்தநாள் இது. அப்பப்பா.. அம்மா, சகோதரி, தோழி என்று எத்துனை உறவுகள்! மனம் முழுமையாக நிறைவு கண்டுவிட்டது. இவர்களுக்கெலலாம் நான் என்ன செய்தேன், அல்லது இனிதான் என்ன கைமாறு செய்ய முடியும்? நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டுமே என்னால் முடிந்தது. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மனமார பிரார்த்தனை செய்ய முடிகிறது. குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா, ஹரிகி சார், அன்பினிய தோழி ஷைலஜா, இவர்களெல்லாம் வாழ்த்துப்பா பாடிக்கொடுத்தார்களே.. இதற்கு தகுதி வாய்ந்தவள்தானா என்ற ஐயப்பாடு இன்னும் தீரவில்லை. எல்லாம் அவன் செயல் வேறு என்ன சொல்ல..
 
 
 
 
ஐயா, மறவன்புலவு க.சச்சிதானந்தன் - பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.



Maravanpulavu K. Sachithananthan tamilnool@gmail.com
 



கவளம் தமிழ் உண்டால் காயம் மெய்க்கும் காலம் பொய்க்கும்
தவளும் தகைமை தழுவித் திகழும் புகழே உலகாய்க் குவியும்
இவளும் மின்தமிழ் வல்லமை மின்னிதழ்த் தமிழாள் என்பதால்
பவளம் கொழித்துப் பல்லாண்டு செழித்து வாழ்வார் பவளநம் சங்கரியே.


இது கவிஞர் திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் எமக்களித்த வாழ்த்துப்பா.

வெண்தவளப் புன்முறுவல் வீரமா சக்தியின்பேர்
பெண்துவளத் தான்சுமந்த பேறென்னே! - எம்பவள
சங்கரியாள் தோன்றிய தங்கத் திருநாளை
இங்கரியான்* வாழ்த்தல் இயல்பு!

*இங்கரியான் = இங்கு அரி யான்.

என் அன்பினிய தோழி நாவலாசிரியை, கவிதாயினி, பிரபல எழுத்தாளர் திரு ராகவன் அவர்களின் தவப்புதல்வி, திருமதி ஷைலஜா அவர்கள் அளித்த வாழ்த்துப்பா.

வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
shylaja shylaja01@gmail.com
7:24 PM (11 hours ago)


அன்புக்கு மறுபெயரே
ஆற்ற்லில் வல்லவரே
இன் மொழி உரைப்பவரே
ஈரோட்டில் வாழ்பவரே
உள்ளத்தில் நல்ல உள்ளம்
ஊக்கப்படுத்தும் பலரை
எந்நாளும் அது பவழாக்கு
ஏற்றமுடனே உண்டு
ஐங்கரன் அருளோடு
ஔவை வளர்த்த தமிழில்
படைப்புகள் பல அளிக்க!
பல்லாண்டு வாழ்க தோழி!

தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன இனிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
பவள சங்கரி





Monday, September 3, 2012

வருத்தம் நல்லது!

பவள சங்கரி
சோகம் சுமையல்ல! ஆம். வாழ்க்கையில் நாம் அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டுமே விரும்புகிறோம். ஆனால் முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதானே.. நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றைக் கண்டு ஏன் அஞ்சி ஒதுங்க வேண்டும். நாம் எப்பொழுதுமே, மகிழ்ச்சி, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை போன்றவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்..
உண்மையாகவே, ஆக்கப்பூர்வமான உணர்வுகளே, உயர்வானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது வீசுகிற துன்பப் புயலையும், சோகச் சுமையையும், ஏமாற்றங்களையும் எவராலும் தடுக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் இது போன்ற தருணங்களே , மகிழ்ச்சி என்றால் என்ன, மன நிம்மதியில் எத்த்னை சுகம் இருக்கிறது என்பதை உணரச் செய்யக்கூடியது. வெய்யிலில் இருந்தால்தானே நிழலின் அருமை புரியும்?

அஞ்சா நெஞ்சம்!

பவள சங்கரி

ருக்மணி லட்சுமிபதி - (1892 - 1951)

Inline image 1

நம் இந்திய அன்னை அடிமைத் தளையில் சிக்குண்டு தவித்தபோது எண்ணற்றவர்கள் அதற்காக பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி தத்தம் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அடுப்படியே உலகம் என்று வாழ்ந்த அந்த காலத்திலும் துணிச்சலாக அன்னை திருநாட்டிற்காக வெளியே வந்து போராடிய பல பெண்கள் இன்று நம் வரலாற்றின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்..

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்:
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

என்பான் பாரதி. அதற்கேற்ப புதுமைப் பெண்களாய், நாட்டின் கண்களாய்த் திகழ்ந்த முத்துப்பரல்களில் குறிப்பிடத்தக்கவர் ருக்மணி லட்சுமிபதி.