Saturday, June 21, 2014

பொன் சிறகு

பவள சங்கரி






பெரிய பெரிய ஆசைகளைப் 
பக்குவமாய் பறைசாற்றுவதில் 
பாதகமொன்றுமில்லை.

பாடுபொருட்கள் பரவசமாய்
பரிந்துரைத்தால் பாவலனுக்கு
பரமானந்தம்தான்!

Thursday, June 19, 2014

யாருக்கு சொந்தம்?


இன்னொரு ஜென் கதை - யாருக்கு சொந்தம்?


ஒரு  போர் வீரர் இருந்தார். பெரும் வீரரான அவர் வயதானவர். பல போர்க்களம் பார்த்தவர் என்றாலும் அப்போது அதையெல்லாம் விட்டு  ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.வயதானவர் என்றாலும்  உடல் வலிமையும் மனோபலமும்  சற்றும் குறையாத அவருக்கு எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் வல்லமை இருந்தது.

 அந்த கிராமத்திற்கு ஒரு இளம் வீரனொருவன் வந்தான். எப்படியும் இந்த முதிய போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் துடித்தான். அவனுக்கு உடல் பலத்துடன் எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் துணிவும் இருந்தது. தன் குதர்க்கமான பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காகக் காத்திருப்பான். அதில் எளிதாக எதிராளியின் பலவீனத்தை கண்டுபிடித்துவிடுவான். முதல் தாக்குதலே மிக பலமானதாக்கி எடுத்த எடுப்பில் எதிராளியை வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி. இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் எண்ணற்றவர்கள்.