Monday, September 1, 2014

ஆறில் ஒரு பங்கு - பகுதி (2)

பவள சங்கரி


“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று.  அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? 

மீனாம்பா? - அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? .....  ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்?  ..... ” என்பதாக ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியதாம். 

பின் அவளைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகக் கூறும்படி ஸதீச பாபுவிடம் கேட்க, அவரும், கதையைச் சொல்லத்  தொடங்கியபோது, ‘ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலுள் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது’ என்கிறார்.  அவர் சொன்னது இதுதான்: