Showing posts with label நறுக்.. துணுக்..... Show all posts
Showing posts with label நறுக்.. துணுக்..... Show all posts

Monday, December 21, 2020

புற்று நோய் சிகிச்சையில் தேனீயின் நஞ்சு .....


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேன் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்பட்டு, நம் தமிழ், சித்த மருத்துவத்திலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தேனீக்களின் கொடுக்கில் உள்ள நஞ்சு மார்பகப் புற்று நோய்க்கு சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர். தேனீயின் கொடுக்கில் வலி உணர்வை உண்டாக்கும் மூலக்கூறுதான் மெலிட்டின் என்பது. இது மிக மோசமான இரண்டு வகை மார்பகப் புற்றுநோயின் உயிரணு சவ்வுகளை 60 நிமிடங்களுக்குள் முற்றிலுமாக அழிக்கவல்லதாம்! மெலனோமா, நுரையீரல், கருப்பை, கணையம் போன்ற அனைத்து புற்றுநோய், டியூமர் கட்டிகளை முற்றிலுமாக அழிக்கக்கூடியதாம்…  இயற்கை மனிதனின் வரம்.  இயற்கை வளங்களைக் காப்பது நம் கடமை.


https://www.medicalnewstoday.com/articles/honeybee-venom-kills-aggressive-breast-cancer-cells?utm_source=Sailthru%20Email&utm_medium=Email&utm_campaign=dedicated&utm_content=2020-12-20&apid=35428543

Thursday, November 5, 2020

இதயம் பேசும் சொற்கள் .....

 

மனிதர்கள் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பொய்யும், நடிப்புமான வார்த்தைகளை உதிர்த்தாலும் உயிர் பிரியும் நேரத்தில் கட்டாயம் உண்மையைத் தான் பேசுவார்கள் .. அவை இதயம் பேசும் சொற்கள் .. நாம் இறுதியாக  என்ன வார்த்தை பேசப்போகிறோம் என்று யாருக்குமே தெரியாது ..   ஆனாலும் எல்லா பாவங்களையும் செய்தாலும் தான் நல்லவராக எண்ணிக்கொள்வதே மனித மனம் .. என்றாலும் இயற்கையின் கணக்கிலிருந்து தப்ப முடியாதே ..சில பிரபலங்கள் உயிர் விடுவதற்கு முன்னர் இறுதியாக உதிர்த்த வார்த்தைகள் இதோ …

 

ஜூலியசு சீசர் – துரோகம் செய்த நண்பனைப் பார்த்து யூ டூ புரூடஸ்?’ என்றார்

 

பெருந்தலைவர் காமராஜர் – தமது உதவியாளரிடம், ”வைரவா விளக்கை அனைத்து விடு”

 

தாமஸ் ஆல்வா எடிசன் - “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டும்”.

 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோ - “இறைவா … நான் ஒரு குற்றமும் செய்யாதவன்”.

 

உலக அழகி டயானா - “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”

 

கிளியோபாட்ரா - தனது கையில் பூ நாகத்தை பிடித்துக் கொண்டுஆஹா… இதோ… என் முடிவு இங் கே இருக்கிறது” என்றார்.

பீத்தோவன் - நண்பர்களே கை தட்டுங்கள் … இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப் போகிறது”

மேரி க்யூரி  - “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”

பாபர் - ”இந்தியாவி ல் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே”

வின்ஸ்டன் சர்ச்சில் – 9 நாட்கள் கோமாவில் இருந்து உயிர் விட்டவர், கோமாவிற்கு செல்லும் முன் இறுதியாகச் சொன்னது, “எனக்கு எல்லாமே போர் அடிக்குது” 

 

Thursday, April 30, 2020

கொரோனா கொடுமை 5



"எங்களுக்கு சாப்பாடோ, பணமோ தரவேண்டாம். வேலை கொடுத்தால் போதும். அரசு சொல்வதைக் கேட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து உழைத்து சாப்பிட்டுக்கொள்வோம்" - 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டி பெண் கூலித்தொழிலாளி கேட்ட விதம் நெஞ்சை உருக்குகிறது. பசிக்கொடுமையையும், தானம் பெற்று பசியாறி சுயகௌரவம் பாதிக்கப்படும் வேதனையையும் உணரும்போது கொரோனாவின் கொடுமை இன்னும் எவ்வளவு தூரம் சென்று அடுத்து எத்தனை உயிர்களின் உணர்வுகளைக் கொல்லப் போகிறதோ தெரியவில்லையே என்று வேதனையாக உள்ளது .. இறைவா

Wednesday, January 29, 2020

அரிசி வைத்தியம்!



குற்றவாளி உண்மை பேசுகிறானா என்று கண்டுபிடிக்க அரிசி வைத்தியம்!

பல நூற்றாண்டுகளாக ஆசியாவில் குற்றவாளிகள் பொய் பேசுகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க, “அரிசி” பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆம், ‘lie detector’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, குற்றவாளிகளை வாய் நிறைய வறண்ட அரிசியைக் கொடுத்து மென்று உமிழச் சொல்வார்களாம். உண்மை பேசுபவர்கள் என்றால் சரியாக மென்று விடுவார்களாம். ஆனால் அவர்கள் பேசுவது பொய் என்றால் அரிசி ஒழுங்காக மெல்ல முடியாதாம் ... உமிழ் நீர் வறண்டு விடுவதால் அரிசி நாக்கு, மேல் அன்னம் என்று ஒட்டிக்கொள்ளுமாம்

Thursday, May 16, 2019

விட்டு விடுதலையாகு!



தேவையற்ற விசயங்களை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்காமல் அவற்றை போகவிட்டால்  நாம் சுமையின்றி சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் என்ன சொல்வதற்கு மட்டுமே எளிதாக இருக்கிறது. பந்தம், பாசம் என்பதெல்லாம் நம்மை எங்கே விடுகிறது. 


பாபா கூறுவது போன்று, குறுகிய வாய் கொண்ட பானையில் உள்ள தின்பண்டத்தை எடுக்க நினைக்கும் குரங்கு கையை உள்ளே விட்டு கை நிறைய அப்பண்டத்தை அள்ளிக்கொண்டு, மூடிய கையை வெளியே எடுக்கவும் முடியாமல், பண்டத்தை விடவும் மனமில்லாமல் அந்தப் பானையைச் சுமந்து கொண்டு இங்கும், அங்கும் ஓடி எளிதாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறது. கையில் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு விலகினால் தாம் சுதந்திரமாகத் திரியலாம் என்பதை உணராமலே சுமந்துத் திரியும் அந்தக் குரங்கைப் போலத்தான் நாமும் தேவையற்றவைகளை தூக்கிச் சுமந்துத் திரிகிறோம்...

Saturday, March 23, 2019

சமயோசிதம்



சரோஜினி நாயுடு அம்மையாரை ஒரு முறை ஒரு பொதுக்கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தனர்.  நிரம்பிய சபையில் அம்மையார் உரையாட ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரத்திலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு கும்மிருட்டில் மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்ற தொழில்நுட்பம் ஏதும் வளர்ச்சியடையாத காலகட்டம் அது. மின்சாரம் வரும்வரை மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அம்மையார்  திடீரென்று மக்கள் இருக்கும் திசை நோக்கி, நண்பர்களே,ஏன் இப்படி இருளைக் கண்டு கலவரமடைகிறீர்கள்? நான் தான் ஒளியுடன் வந்திருக்கிறேனே! ஏன் இப்படி கூச்சலிடுகிறீர்கள்? என்றவுடன் மக்கள் கூட்டம் அமைதியானாலும், அவர்களுக்கு ஐயம். எங்கு விளக்கு என்று தேடத்தான் செய்தார்கள். மீண்டும் அவர், உங்கள் மன இருளைப் போக்கும் அறிவொளி ஏற்றத்தானே நான் இங்கு வந்திருக்கிறேன், அமைதியாகக் காத்திருங்கள் என்றவுடன் மக்களின் கைதட்டல் ஒலி வானைப் பிளந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்.. இதுபோன்று மக்களைக் கட்டுப்படுத்த சமயோசித அறிவாற்றலும் வேண்டுமே!

Thursday, March 22, 2018

4,500 ஆண்டுகள் பழமையான தமிழ்!



செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது போன்று சமசுகிருத்தத்தில் இல்லையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கி.மு. முதலாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிற்குச் சென்று அந்நாட்டையே உருவாக்கியவள் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கும் இந்த ஆய்வு ஆதாரமாக இருக்கின்றது!






Tuesday, November 28, 2017

உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?




சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி  சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

Tuesday, May 9, 2017

தண்ணீர் மரம்!



பண்டிபூரில் மட்டி மரம் எனும் வகை மரங்கள்  தன் பெரிய  தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது..  ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற மரங்களை அதிகமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பூங்கா, அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இயன்றவரை இது போன்ற மரங்களை பயிரிடவேண்டியது அவசியம்! 

Tuesday, April 11, 2017

தீம்புளி



தீம்புளி சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம்!
புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் . . (மதுரை காஞ்சி 318)
பண்டமாற்று முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்

தெய்வப்புலவர்!



1330 குறட்பாக்களை ஈரடியில் எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரே ஒரு நாலு வரி பாடல் எழுதியுள்ளார்.
images
அடியிற்கினியாளே அன்புடையாளே 
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- 
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
அன்பு மனைவி இறந்தபின் அவர்தம் பிரிவைத் தாங்காமல் கலங்கி நின்றவர் , நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்று பாடியவர், அதன்படி தம் மனைவியாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டியவர், அப்பிரிவைத் தாளாமல் இப்படி எழுதியுள்ளார்!
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
2. திருக்குறள் – 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
5. கற்பம் – 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
12. முப்புக்குரு – 11 பாக்கள்
13. கவுன மணி – 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
15. குருநூல் – 51 பாக்கள்

Monday, April 3, 2017

நறுக் .. துணுக்



மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் நாய்க்கும் உடனே அந்த கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை.

பழைய புத்தக வாசனையில் ஒரு பரிமளம் (perfume) இருக்கிறது. புத்தகப் பிரியர்கள் கவனிக்க...!

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் 10 தொழில்களில் ஒன்று யோகாசனம்!

இந்தியாவில் மட்டும் காச நோயால் தினசரி 1,400 பேர் உயிரிழக்கிறார்கள் . 18 இலட்சம் பேர் காச நோயால் இந்தியா, இந்தோநேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா சீனா போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2015 இன் கணக்கெடுப்பு இது. 2016 இல் இந்தியாவில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,820 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் இந்த காச நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

அட...

நம் இந்தியாவில் தீவிரவாதத்தினால் இறந்தவர்களைவிட 6 மடங்கு அதிகமாக காதல் விவகாரத்தினால்தான் இறந்திருக்கிறார்கள்! 2001 - 2015 கணக்கெடுப்பில் மட்டும் 38,585 பேர் காதலுக்காக தற்கொலை அல்லது கொலை மூலமாக இறந்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் இதில் முதல் இடம்!

சூரியசக்தி



சூரியசக்தி 2020க்குள் மாபெரும் மின்சக்தியாக உருமாறி நம் இந்தியாவின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாகப்போகிறது! இதில் ஒரே நெருடலான விசயம் பேனல்களின் அதிக விலை. இதற்குரிய விலை குறைவான மாற்று கண்டுபிடிப்புகளை இஸ்ரோ ஆய்வில் உடபடுத்தியுள்ளதாக இதன் தலைவர் கூறியுள்ளது வரவேற்பிற்குரியது. இந்த ஆண்டிலேயே சூரிய சக்தியால் பெறப்பட்ட அதிக மின்சக்தி பொது விநியோகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது!

தர வரிசைப் பட்டியல்!


கல்வித்தர வரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே முதல் இடத்தை, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஐடி தக்க வைத்துக்கொண்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கான தர வரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. பங்களூருவைச் சார்ந்த அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த 10 கல்வி நிறுவனங்கள் சிறப்பான நிலையை பெற்றுள்ளன.

17.5 கி.மீ பேருந்து பயணத்திற்கு ₹1 கட்டணம்!


கல்கத்தாவில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சாண எரிவாயு மூலமாக இயங்கும் பேருந்தை 17.5 கி.மீ தொலைவிற்கு ₹1  மட்டும் பொது மக்களிடமிருந்து கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இயக்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 15 பேருந்துகளை மற்ற வழித்தடங்களிலும் இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது இயற்கை மாசுபடுவதிலிருந்து கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கு மாற்று வருமானத்தையும், பொது மக்களுக்கு இந்தியாவிலேயே மிகமிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மிக அதிக அளவில் மாடுகள் இருக்கின்ற பீகார், கர்நாடகா, தமிழ்நாடு ...

மது விற்பனை சாகசம்!



நீதித் துறையின் மது விற்பனை தொடர்பான தீர்ப்பிற்கு மாற்றுவழி காணும் மாநில அரசுகள்! ஒவ்வொரு மாநிலமும் மது விற்பனையில் வரக்கூடிய வருமானத்தில் சுமாராக பாதி தொகை இழப்பதால் மாநில நெடுஞ்சாலை என்பதை மாவட்ட நெடுஞ்சாலையாக பெயர் மாற்றம் செய்யும் முயற்சி... ! மக்கள் நல்வாழ்வில் நீதித் துறையும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மாநில அரசுகள் இனி என்ன செய்யப்போகின்றன? இதில் மாநில நெடுஞ்சாலையின் சுங்கச் சாவடிகளின் கட்டணம் வேறு அதிகரித்துள்ளது..:-( தமிழக அரசு மது விற்பனை ...

வங்கி .. வங்கி..



வைப்புத் தொகைக்கு இன்று முதல் 0.1% வட்டி குறைப்பு. ஸ்டேட் வங்கியில் இன்று முதல் சிறுசேமிப்பு கணக்கிற்கு வைப்புத் தொகை கட்டாயமக்கப்பட்டுள்ளது. போதிய வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்று முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மற்ற வங்கிகளும் விரைவில் இதனைத் தொடரும். அனைத்து ஸ்டேட் வங்கிகளும் ...

பயணச்சீட்டு வாங்குபவரா நீங்கள்?


ரயில் பயணிகளால் ஆண்டுதோறும் இரயில்வேத் துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு 35,000 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 39,000 கோடியாக உயர்ந்துள்ளது. பயணச் சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களால் ஏற்படும் இழப்பு ஒழுங்காக, நேர்மையான முறையில் பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்பவர்கள் தலையில் தான் விடிகிறது. உரிமையைக் கேட்டு போராடும் பலர் கடமையைப் பற்றி நினைப்பதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.. :-( சில பிரிவுகளில் பாதிக்கும் மேலான பயணிகள் ...

மோப்ப சக்தி



பவள சங்கரி   கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை. மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.   மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...