Saturday, March 23, 2019

சமயோசிதம்



சரோஜினி நாயுடு அம்மையாரை ஒரு முறை ஒரு பொதுக்கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தனர்.  நிரம்பிய சபையில் அம்மையார் உரையாட ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரத்திலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு கும்மிருட்டில் மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்ற தொழில்நுட்பம் ஏதும் வளர்ச்சியடையாத காலகட்டம் அது. மின்சாரம் வரும்வரை மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அம்மையார்  திடீரென்று மக்கள் இருக்கும் திசை நோக்கி, நண்பர்களே,ஏன் இப்படி இருளைக் கண்டு கலவரமடைகிறீர்கள்? நான் தான் ஒளியுடன் வந்திருக்கிறேனே! ஏன் இப்படி கூச்சலிடுகிறீர்கள்? என்றவுடன் மக்கள் கூட்டம் அமைதியானாலும், அவர்களுக்கு ஐயம். எங்கு விளக்கு என்று தேடத்தான் செய்தார்கள். மீண்டும் அவர், உங்கள் மன இருளைப் போக்கும் அறிவொளி ஏற்றத்தானே நான் இங்கு வந்திருக்கிறேன், அமைதியாகக் காத்திருங்கள் என்றவுடன் மக்களின் கைதட்டல் ஒலி வானைப் பிளந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்.. இதுபோன்று மக்களைக் கட்டுப்படுத்த சமயோசித அறிவாற்றலும் வேண்டுமே!

No comments:

Post a Comment