சுக்கா? மிளகா?.......சும்மாவா வந்ததிந்த சுதந்திரம் -[பாகம் 2 ]]
அனசுயாபென் சாராபாய் { 1885 - 1972 }
தொழிலாளர்களுடைய நலனுக்காக இரசியா, சீனா போன்ற நாடுகளில் பொதுவுடமைச் சித்தாந்தம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவினரால், பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தியாவில் இதற்கெல்லாம் தாயாகவும், முன்னோடியாகவும் இருந்தவர் அனசுயாபென் சாராபாய்.
அனசுயாபென் சாராபாய் 1885ம் ஆண்டு, ஒரு செல்வச்செழிப்பான , தொழிலதிபர் குடும்பத்தில், அகமதாபாத்தில் பிறந்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில், சொந்தமாக நூற்பாலை நிறுவிய வெகு சொற்பமானவர்களில் இவருடைய தந்தையும் ஒருவர். இவருடைய தாய் மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர். அனசுயாவிற்குத் தன் தாயின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இவருடைய பெற்றோர் இவரின் 11 வது வயதிலேயே இறந்து விட்டனர். இதற்குப் பிறகு இவர் தன்னுடைய இளைய சகோதரர் அம்பாலால் மற்றும் சகோதரி காந்தா ஆகியோருடன் தன்னுடைய மாமன் சிமன்பாய் என்பவரிடம் தான் வளர்ந்தார்.
ஒரு பிரபல தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்த அனசுயாபென் இன்று அதிக சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிற…
தொழிலாளர்களுடைய நலனுக்காக இரசியா, சீனா போன்ற நாடுகளில் பொதுவுடமைச் சித்தாந்தம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவினரால், பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தியாவில் இதற்கெல்லாம் தாயாகவும், முன்னோடியாகவும் இருந்தவர் அனசுயாபென் சாராபாய்.
அனசுயாபென் சாராபாய் 1885ம் ஆண்டு, ஒரு செல்வச்செழிப்பான , தொழிலதிபர் குடும்பத்தில், அகமதாபாத்தில் பிறந்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில், சொந்தமாக நூற்பாலை நிறுவிய வெகு சொற்பமானவர்களில் இவருடைய தந்தையும் ஒருவர். இவருடைய தாய் மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர். அனசுயாவிற்குத் தன் தாயின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இவருடைய பெற்றோர் இவரின் 11 வது வயதிலேயே இறந்து விட்டனர். இதற்குப் பிறகு இவர் தன்னுடைய இளைய சகோதரர் அம்பாலால் மற்றும் சகோதரி காந்தா ஆகியோருடன் தன்னுடைய மாமன் சிமன்பாய் என்பவரிடம் தான் வளர்ந்தார்.
ஒரு பிரபல தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்த அனசுயாபென் இன்று அதிக சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிற…