Saturday, July 30, 2016

INDIAN TEMPLES

எமிலியின் பர்ஃபி!


எமிலி டிக்கின்சன், 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த,  1800 கவிதைகள் எழுதியுள்ள சிறந்த கவிஞர். 1870 களில் எடுத்த சென்சசு கணக்கெடுப்பில் எமிலி, குழந்தைகளைப் பராமரிக்கும்  வேலையில்லாதவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்! இவர் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர்களும் உண்டு! இவர் கைப்பட எழுதிய தேங்காய் பர்பி செய்முறை குறிப்பு கிடைத்துள்ளதாம்.. ரெசிப்பியும் இருக்கு நாமும்தான் செய்து பார்க்கலாமே.. 


Monday, July 25, 2016

வாசுகியாயணம்




1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய குறள் மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:

‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!



ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் என்று ஆவலாகச் சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். காரணம் வாதிட்ட அனைவரும் இலக்கியம் குறித்து ஏதும் பேசவில்லை. மேலோட்டமான வாதமாகவே இருந்தது. ஆனாலும் அனைவரின் வாதங்களும் சுவையாகவே அமைந்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும்விதமாக நடுவர் திரு சுகி.சிவம் அவர்கள் தமது உரையில் ஆழ்ந்த பல கருத்துகளை முன்வைத்தது பாராட்டிற்குரியது