Saturday, May 10, 2014

அம்மா என்னும் பிரம்மா!


பவள சங்கரி



அம்மா கைதேர்ந்ததொரு சிற்பி
பிண்டத்தைக் கொடுத்த பிரம்மாவுக்கு
அண்டத்தில் வாழும் உருவைச் செதுக்கிய சிற்பி!
கண்டம் விட்டு கண்டம் போனாலும் உண்மை
விண்ணம் ஆகாமல் உறுதியாய் வடித்த சிற்பி!
குருதியுடன் குறும்பும் குறும்புடன் அன்பும்
அன்புடன் பண்பும் பண்புடன் பாசமும்
பாசமுடன் நேசமும் நேசமுடன் மனிதமும்
சேர்த்தேச் செதுக்கினாள் சீரான உளிகொண்டு!

Thursday, May 8, 2014

ஒற்றையடிப் பாதை!


                                          படம் உபயம் : அந்தியூரன் பழமைபேசி

ஒற்றையடிப் பாதை
கழிவில்லாத தூய்மை
தெளிவான நேர்க்கோடு
கண்முன்னே சேருமிடம்

கோடை மழையும்
அடைகாக்கும் நேயமும்
அலட்டும் இடியோசையும்
அதிராத தெளிவான பாதை

சிறகொடித்த குயிலின் 
வனம் காக்கும் ஓசை
ஊனமான உளியின்
செப்பனிடும் மனித(ஓ)சை

பசும்புல்வெளி அணைத்த
சீர்மிகுவெளி சீரற்றதேடல்
சினமற்ற சீரானபயணம்
ஊனமற்ற உள்ளம்

பாதை தெளிவானால்
பயணம் இனிதாகுது
பாரம் நீக்கமாகுது
பணிகள் இனிதாகுது!!!

அனிச்ச மலரே!



பவள சங்கரி




அனிச்ச மலரே
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்
குயிலின் குரலைத் தாங்கி
தலையசைக்கச் செய்கிறாய்
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்
வறண்ட பூமியில் பசுமையாய்
வளமை சேர்க்கிறாய்
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்
திரண்ட மேகமாய் சீர்தூக்கி
குளிரச் செய்கிறாய்
வளியின் வீச்சிலும் நிமிர்ந்துநின்று
ஆண்மை காக்கிறாய்
எலியின் நக்கலையும் துச்சமாக்கி
துணிந்து நிற்கிறாய்
வீண்பழியின் பரிசையும்  வீசியெறிந்து
பட்டொளிவீசி நிற்கிறாய்
வான்மழையாய் வரமளித்து வாடும்பயிரை
காத்து நிற்கிறாய்
கனியின் கற்கண்டுச் சுவையாய்
மாறி நிற்கின்றாய்
சூடிய நிலவின் சூட்சுமத்தையறிந்து
தேவதூதனாய் ஆகிறாய்
பாடும் பறவையின் பாசமறிந்து
நேசம் கொள்கிறாய்
வீழ்த்தும் வித்தையை விலக்கியடித்து
வீறுகொண்டு எழுகிறாய்
சிலந்தி வலையில் சிக்காமல்
சிற்பமாய் நிற்கிறாய்
புன்னகையெனும் கிரீடம் சூடி
பொறுமையின் சிகரமாகிறாய்
பூந்தளிரின் மனம் கொண்ட பூமகனாய்
பூவுலகம் வாழச்செய்கிறாய்
நாடும் வீடும் நலம்பெறவே
பாடும் கவியே வரமருளே!!!

Wednesday, May 7, 2014

பாட்டி சொன்ன கதை - 27



பவள சங்கரி


ஆர்க்கிமிடீசும், அம்மாப்பேட்டையும்!


ஹாய் குட்டீஸ் நலமா?


இன்னைக்கு நாம பார்க்கப் போற கதை மிகச் சுவாரசியமானது. விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் வாசிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறதல்லவா?   நிறைய படித்தவர்களுக்கும், மிகப்பெரிய அறிவுஜீவிகளுக்கும் , அனுபவசாலிகளுக்கும் மட்டுமே அதெல்லாம் சாத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. இளம் வயதிலேயே விஞ்ஞானிகளான பலர் இருக்கிறார்கள். மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாகி, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது அல்லவா. அதை அழிப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் உட்பகுதியை அரைத்து, அதிலிருந்து வருகிற ‘மீயூசிலே ஐஸ்’ என்ற வழுவழுப்பான திரவத்தைப் பயன்படுத்தி, அந்த லார்வாக்கள் உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல் , இந்த ஜெல் கலந்த இரண்டே நாட்களில் இறந்ததோடு கொசுவின் கூட்டுப்புழுக்கள் மொத்தமாக அழிந்ததை நிரூபித்திருக்கிறார். இயற்கை முறையிலான இதனால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறும்  பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவர், புதுவையைச் சேர்ந்த காஸ்ட்ரோ, தன் ஆசிரியையின் உதவியுடன் இதனைச் சாதித்துள்ளார். அதற்காகப் பல பரிசுகளும் வென்றிருக்கிறார் இவர். நம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொசுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் உறுதியோடு இருக்கிறாராம், இவர். எத்துனை சமுதாய அக்கறை பாருங்கள் இந்த வயதிலேயே.. 

கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள் (4)


பவள சங்கரி



என்னுள் இருக்கும்  உயிரின் ஒலி உன்னுள் இருக்கும் உயிரின் செவியை எட்ட இயலாது; ஆயினும் நாம்  தனிமையில் இல்லை என்றே பேசுவோமே!

மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமும் உள்ளது.

மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்