Showing posts with label ஆன்மீகம்.. Show all posts
Showing posts with label ஆன்மீகம்.. Show all posts

Thursday, October 26, 2017

சூரசங்காரம்!


நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி!


முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார்.
IMG_20171025_183821147
IMG_20171025_181904034
ஆறுமுகனின் திருவிளையாடல்களுள் ஒன்றான சூரசங்காரம் என்பது ஒரு குறியீடு. ஆணவம் எனும் அசுரனை அழித்து நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தும்பொருட்டு சக்தி அம்சமாக எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு திருமுகங்கள் 6, படைவீடுகள் 6, வளர்த்தெடுத்த கார்த்திகைப்பெண்கள் 6 , சரவணபவ எனும் திருமந்திரமும் 6 எழுத்து.
IMG_20171025_182523646
மலைக்கோவிலும், திரு ஆவினன்குடி ஆலயமும் மாலை 4 மணிக்கே குமரன் சூரனை வதம் செய்ய கிளம்பியவுடனே நடை சாத்தப்படுகிறது. பின் சூரசங்காரம் முடிந்தபின் ஆலயத்துனுள் எழுந்தருளுகிறார்.

Friday, April 21, 2017

சிவன் மலை ஆண்டவன் உத்திரவு!



நம் தமிழ்நாட்டில் சித்தர்களின் இராச்சியம் தொடர்ந்தவாறுதான் உள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் சிவன் மலை நிகழ்வு. சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. கொங்கு நாட்டில், காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கொண்டுள்ள சிவன்மலை. வெகு காலங்களுக்கு முன்பு இக்கோவில் பட்டாலிமலை என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் சிவ வாக்கிய சித்தர் திருப்பணிகள் செய்துள்ளார்.


ஆண்டவன் உத்திரவு!

18010860_796916363807516_6034925669327239018_n
வரும்காலத்தில் நடக்கப்போவதை குறிக்கும் விதமான பொருளை இக்கோவில் தெய்வம் முன்கூட்டியே பக்தர்கள் கனவில் வந்து சொல்வதும், அதன்படி இந்த ஆலயத்திலுள்ள பெட்டியில் கனவில் குறிப்பிட்ட அப்பொருளை வைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன. இது வெகு காலமாக தொடர்ந்து வரும் வழமையாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சொம்பில் நீர் வைத்து பூசை செய்யும்படி வாக்காகியுள்ளது. அந்த ஆண்டில்தான் சுனாமி எனும் பேரரக்கனால் பெரும் அழிவு ஏற்பட்டது. அதேபோல் தங்கம் வைத்து பூசை செய்தபோது வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் உயர்ந்த தங்கத்தின் விலை இன்றளவிலும் அப்படியே நிலைத்தே உள்ளது. பச்சரிசி வைத்து பூசை ஆனபோது விவசாயம் செழித்தோங்கியது. இதுபோன்று நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து, இதுவரை பூஜை செய்யப்பட்டுள்ளன. கார்கில் போர் வந்தபோது துப்பாக்கி வைத்து வழிபாடு நடந்ததும் மறக்கக்கூடிய விசயம் அல்ல.

இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் நிகழ்விற்கேற்றவாறு பொருள் வைத்து வழிபட பக்தர்களின் கனவில் வாக்களிக்கப்படுகிறது. இந்த முறை வலம்புரிச் சங்கு வைத்து வழிபட உத்திரவு ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் அருள் பூரணமாக கிட்டியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக நல்ல காலம் பிறந்துள்ளதாகவே கொள்ளமுடிகிறது!


பக்தர் கனவில் வாக்கு!


sivan malai
திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் காங்கயத்திற்கு அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களில் , இருக்கும் தனது பக்தர் எவரேனும் ஒருவரின் கனவில் சிவன் மலை சாமி தோன்றி, குறிப்பிட்ட அந்த பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுகிறார். அந்த நபர் அருள் வந்த நிலையில், கோயில் நிர்வாகியிடம் வந்து தாம் கண்ட கனவு பற்றிய செய்தியைக் கூறுகிறார். அவர் சொன்னது உண்மைதான் என்று உறுதி செய்யும் வகையில் அந்த நிர்வாகிகள் சிகப்பு மற்றும் வெள்ளை பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு ஒரு குழந்தையை எடுக்கச்சொல்லுவார்கள். இதற்கு பூச்சயனம் கேட்பது என்பார்கள்.
அதில் ஒரே முறையில் வெள்ளைப் பூ வந்தால் முருகப்பெருமான் கனவில் தோன்றி கூறியது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டு அந்தப் பொருளுக்கு சிறப்பு பூசைகள் செய்து அதை அப்பெட்டியில் வைத்து விடுவார்கள். இதனுடன் அருள் வந்து வாக்கு சொன்ன பக்தர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்து விவரங்களையும் தெளிவாக அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுகிறார்கள். இது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
சென்ற ஜனவரி 11 2017, அன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொங்கூரைச் சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில், இரும்பு சங்கிலி வைக்க உத்தரவானதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. எத்தனைபேர் இரும்புக் கம்பிகளுக்குப்பின் சென்றார்கள் என்பதை உலகமே அறியுமே.. அதற்கு முன், கடந்த ஆக., 29, 2017இல் பூமாலை வைக்கப்பட்டிருந்தது. கணக்கு நோட்டு புத்தகம் வைத்து பூசை செய்தபோது, மத்திய அரசாங்கம் கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆக இன்று 21, ஏப்ரல் 2017, சிவனருள் தீமைகளை அழித்து நன்மைகளை நிலைபெறச் செய்யும் வகையில் வலம்புரிச் சங்கின் நாதம் எங்கும் இனிமையாக ஒலிப்பதைக் கேட்கலாம்!
படத்திற்கு நன்றி : திரு ரகுராமன் பாலகிருஷ்ணன்

Saturday, July 2, 2016

சொற்கோவில்



சொற்கோயில்! அற்புதமான ஆன்மிக இதழ்! அன்பு நண்பர் திரு. இரா. குமார் அவர்களின் மேன்மைமிகு இந்த பத்திரிக்கை மாதமிரு முறை வர இருக்கிறது. இவ்வரிய இதழில் முதல் இதழிலேயே எம் படைப்பையும் ஏற்றருளி எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வானும், கடலும் போல இறையருளால் இந்த சொற்கோயில் இப்பிரபஞ்சம் உள்ளமட்டும் சிறப்பாக வலம் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.


Saturday, August 8, 2015

அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!


பவள சங்கரி
ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.
G_T3_646
பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

Wednesday, August 5, 2015

அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!


பவள சங்கரி
சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!
சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!


இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?

Tuesday, July 28, 2015

அடியாரும், ஆன்மீகமும் (3)



பவள சங்கரி
அடியார்கள் எந்த நிலையிலும் மனம் கலங்கி நிற்கமாட்டார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ஒன்றேபோல் பாவித்து அன்பும், பக்தியும் தம் இரு கண்களென வாழ்க்கை நெறியில் சற்றும் தடம் புரளாமல் வாழ்ந்து காட்டுபவர்கள். எக்காலத்தும், எஞ்ஞான்றும் சிவபிரானை வழுவாமல் வாளாக் கிடந்து வாடி நிற்கமாட்டார்கள்.

Monday, July 27, 2015

அடியாரும் ஆன்மீகமும் (2)


பவள சங்கரி
1382426_823390031082957_239293274964935666_n
12914_823390161082944_8842537095226880754_n
ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

Sunday, July 26, 2015

அடியாரும், ஆன்மீகமும்!



 ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான்,

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

Tuesday, September 23, 2014

அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!


பவள சங்கரி


அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!
பழமைக்கோலம் பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!
பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!
தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

Friday, August 1, 2014

கந்த சஷ்டிக் கவசம் பிறந்த கதை

பவள சங்கரி



முருகனின் புகழ் பாடும் பல நூறு பாடல்கள் இருப்பினும் இந்த கந்த சஷ்டிக் கவசம் மட்டும் மக்கள் மனதில் தனிப்பெரும் இடம் பிடித்துள்ளதும் உண்மையே..! இப்பாடலைப் பாடியவர் பாலதேவராய சுவாமிகள் . 

 பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை எத்தகைய உணர்வுப்பூர்வமானது என்று பாருங்களேன்!. பாலதேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார், என்னென்னவோ சிகிச்சைகள் செய்தும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வேதனை தாங்காத நிலையில், வாழ்க்கையே வெறுத்துப் போனதால் கடலில் விழுந்து உயிரையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்து  திருச்செந்தூருக்கு வந்து சேருகிறார்.

Tuesday, June 10, 2014

ஓடும், செம்பொனு மொக்கவே


பவள சங்கரி



சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
  ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
         கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
          வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

     குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்; 

இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும்  அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட  விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.

Friday, April 25, 2014

உடற் கூற்று வண்ணம் : பட்டினத்தார்






http://youtu.be/JrL1mocPquQ

உடற் கூற்று வண்ணம்:

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

Wednesday, February 26, 2014

மகாசிவராத்திரி - சிவபூசாவிதி

பவள சங்கரி

இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 

Inline image 1

பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம். 

இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM


திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.

மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, February 14, 2014

’புரட்சிச் சித்தர்’ சிவவாக்கியர்!



பவள சங்கரி


சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சித்தர்’ என்றே குறிப்பிடப்பட்டார். ஆரம்பத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறியவர் இவர். வேதியர் குலத்தில் பிறந்த சிவவாக்கியர் காசி யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் செல்ல, ‘சக்கிலி’ வகுப்பைச் சார்ந்த ஒரு ஞானியரிடம் சென்று தம் விருப்பத்தை வெளியிடுகிறார். அந்த ஞானியும் சிவவாக்கியருக்கு, காசும், பேய்ச்சுரைக்காயும் கொடுத்து,  “எந்தப் பெண் உனக்கு மணலும், இந்த பேய்ச்சுரைக்காயும் கொண்டு நல்ல உணவு சமைத்துப் போடுகிறாளோ அவளே உன் மனைவி”,  என்று  சொல்லி அனுப்பி வைக்கிறார். அவரும் இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு,  தேடியலைந்து, ஒரு குறப்பெண்ணைக் கண்டு அவளையே மணந்து இல்லறத்தில் ஈடுபடுகிறார். ஒரு நாள், பிழைப்பிற்காக மூங்கில் வெட்டும்போது, அது பொன்மாரி பொழிய அதை நீத்து, அங்கிருக்கும் ஒரு கீரையைப் பிடுங்குகிறார். அப்போது தன்னிலைப் பெற்று கொங்கணரால் உள்ளம் திருந்துகிறார். பின் சைவராக மாறி தம் பெயரில் தமிழில், ‘சிவவாக்கியம்’ என்ற நூலை எழுதுகிறார்.  இவர் பிறக்கும் போதே, ‘சிவ’ என்று சொல்லிக்கொண்டே பிறந்ததனால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயரிட்டுள்ளனர்.  பின் வைணவராக மாறி, திருமழிசை ஆழ்வார் என்ற பெயர் பெற்றார். சிவவாக்கியர் உருவ வழிபாட்டை முற்றிலும் மறுத்தார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள்  செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத்  தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள்  செய்வதும் என்று தொன்று தொட்டு  நடந்து  வரும் வழமைகளை  மூடப்பழக்கங்கள் என்று  சாடுகிறார்.   

Sunday, October 6, 2013

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!


பவள சங்கரி



வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!

Saturday, October 5, 2013

தாயே! தவமே!


பவள சங்கரி




தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

Thursday, October 3, 2013

வளம் தரும் நாயகியே! வருகவே!


பவள சங்கரி
Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

Tuesday, September 10, 2013

வினை தீர்க்கும் விநாயகன்!



பவள சங்கரி



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். 

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். காணும் ஒவ்வொரு பொருளும் இறை வடிவாகக் காட்சியளிப்பதே தமிழர்தம் அறநெறியாம். கீதையில் கண்ணன் அருளும் மொழியும் இதுதான். மலரிலும் மகேசனைக் கண்ட  தாயுமானவர் சுவாமிகள் அருளியதும், ‘பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பதுதான். பார்க்கின்ற இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண ஆனந்தம் ஆண்டவன் என்கிறார் அவர். அதாவது நீர், வான், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், மண், உயிர்கள் என எட்டுப் பொருட்களிலும் நிறைந்துள்ளவன் இறைவன் . உடலில் பேதமிருந்தாலும், இறைவன் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் . இந்த உயரிய தத்துவத்தின் மொத்த உருவமே விநாயகப் பெருமானின் திருவுருவமாகும். பூமியின் ஒரு உருவகம்தான் விநாயகர் உருவம்.. 
யானை முகமும், மனித உடலும் கொண்டு அனைத்து உயிரும் சமம் என்று சொல்லாமல் சொல்கிறானோ?

Friday, October 19, 2012

நவராத்திரிக் கவிதைகள்


இயற்கைக்காட்சியே இறைக்காட்சியாய்
மறையாய்நிற்கும் மாலவன்காட்சியாய்
மறைந்திருந்து அருள்தரும் கற்பகத்தருவாய்
உள்ளமெலாம் நிறைந்திருந்து தண்ணளியாய்
கள்ளமெலாம் அழித்து கருணைமழையாய்
இகமும் பரமும் எமை உணரச்செய்த உத்தமமாய்
இச்சகத்தோரும் நற்கதி பெற்றுய்யுமாறு
வரமளித்தருளும் வண்ணப் பூங்கொடியே!
வ்ந்தெமைக் காத்தருளே! கோதைநாயகியே!
தத்துவமும் தவமும் தந்தெமைக் கனிவாய்
சூலமேந்தித்தாயே விரைந்துவந்து காப்பாயே!


அகமும் முகமும்  அற்புதமாய் மலர்ந்து
கணமும் உனை மறவாமல் நினைந்துருகி
கருத்துடன் நாளும் கவிபாடி கண்மலர்ந்தேன்
கற்பகத்தருவே! கார்மேகமே! கதிரொளியே!

போற்றி அருளுகநின் பாதமலர்
அம்பிகையே அகிலாண்ட நாயகியே
மாதவம் செய்து மணாளனை அடைந்த
கற்புக்கரசியே! இரட்சித்துக் காத்தருள்வாயே!

தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய்  எம்உளம் நிறைந்திடுவாள்!

அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!

லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!


Saturday, October 8, 2011

மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!


ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர்


மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே! - ஓம் அன்னையே! லலிதாம்பிகையே! வெற்றி வாணியே!


சிவத்தலம் பெயர் திருமீயச்சூர் இளங்கோவில்
இறைவன் பெயர் சகலபுவனேஸ்வரர்
இறைவி பெயர் மின்னு மேகலையாள்

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே

வேடமுடைய பெருமா நுறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாடலாய தமிழீரைந்து மொழிந்துள்கி
ஆடு மடியாரகல் வானுலகம் அடைவாரே.

யாதுமாகி,எங்கும் நீக்கமற நிறைந்த எம் தாய் அகிலாண்ட ஈசுவரி, அவளன்றி ஓர் அணுவும் அசையாது, அகில உலகையும் அருளாட்சி செய்யும் , ஸ்ரீபுரம் எனும் திருமீயச்சூரில் எழுந்தருளி எண்ணியவற்கு எண்ணியவாறே, அருள் புரியும் நாயகியின் கடைக்கண் பார்வை வேண்டி ஆங்கு படை எடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.



புவனமெங்கிலும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும், அன்னையின், ’ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்’, உருவான புண்ணியத் தலம் இதுவே1 நான்கு வேதங்களுக்கும் இணையான இம்மந்திரத்தை இத்தலத்தில் வந்து பாராயணம் செய்து புண்ணியங்கள் பல பெற்றவர் எண்ணற்றவர். அகத்திய மாமுனி நவரத்தின மாலை இயற்றிய தலமும் இதுவே. காவிரிசூழ் பொழில் சோலைகள், வயல்களின் நடுவே அமைந்து அற்புதமாய் காட்சியளிக்கும் திருமீயச்சூர் என்ற இத்திருத்தலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

பாதாளலிங்கம் உட்பட இருபத்தி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளதும், நவக்கிரகங்கள் இல்லாத சிவத்தலமாகவும், ஒரே கோவிலில் இரண்டு சிவன் சன்னதிகள் அமைந்துள்ளதும் யானையின் பின்புறம் [கஜபிருஷ்ட விமானம்] போன்ற அமைப்பை உடைய விமானத்தையும் , இப்படி பல்வேறு தனித்தன்மைகளுடன், சூரியனுக்கு சாபவிமோசனம் கிடைத்த தலமாகவும், சூரியனுக்கு சனி, எமன், வாலி, சுக்ரீவன், அருணன், கருடன் ஆகியோர் பிறந்த தலமாகவும் இப்படி பல்வேறு பெருமைகள் பெற்ற தலமாகும்.

மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் பாதையும், கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையும் சந்திக்கும் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் திருமீயச்சூர் அமைந்துள்ளது. பேரளத்திலிருந்து திருமீயச்சூருக்குச் செல்லும் பாதை,மிக அழகான, பசுமையான வயல்வெளிகளின் இடையே அமைந்த பாதை மனதிற்கு இதமான ஒரு அமைதியை ஏற்படுத்துவதும் இயற்கை.

திருமீயச்சூர் சன்னதித் தெருவின் வலது புறம் அமைந்துள்ள சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் சூரியன் தன் சாபம் நீங்க, அன்றாடம் இக்குளத்தில் நீராடி, தவமிருந்து இறைவனை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றது. இத்திருக்குளத்தின், கிழக்கில் சூரியனும் மேற்கில் விநாயகரும் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்கள்.



ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நெடிதுயர்ந்த கொடிமரத்தை வணங்கி , அடுத்து நந்தி தேவரை வணங்கி. கோபுரத்தின் தென்புறம் அமைந்துள்ள காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அன்னையையும் தரிசித்து விட்டு உள் நுழைந்தால், மேகநாதசுவாமி ஆலயம் காட்சி கொடுக்கின்றது. மகாமண்டபத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மேகநாதரைக் காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீமேகநாதசுவாமியை திருஞானசம்பந்தர் பதினொரு பதிகங்களிலும், திருநாவுக்கரசு சுவாமிகள் பத்து பதிகங்களிலும் பாடித் துதித்துள்ளனர்.

இக்கோவிலில் ரத சப்தமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் மற்றுமொரு தனிச்சிறப்பு, ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும், சித்திரை மாதம் 21 முதல் 27 முடிய (7 நாட்கள்) உள்ள நாட்களில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் காலை 5.55 லிருந்து 6.02 வரை ராஜகோபுர வாயில் வழியே கருவறையிலுள்ள திருமேகநாதசுவாமியின் மீது ஒளிர்வது அதிசயமாகும். இச்சமயம் நடைபெறும் சூரியனார் பூசையில் தேவருலகினரும் கலந்து கொள்வதாக ஐதீகம்.



உட்பிரகாரத்தில், தெற்கு புறம், பன்னிரு நாகர்கள் திருவுருவங்கள் பாங்குற அமைந்துள்ளன. நவக்கிரக வழிபாட்டிற்குப் பதிலாக இக்கோவிலில் நாகர் வழிபாடு நடத்தப்படுகிறது. நவக்கிரக வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இக்கோவில் கட்டப்பட்டு இருப்பதால் ஸ்ரீநாகர் பூசையே இன்றளவும் நடத்தப்படுகிறது. அருகில் சமயக்குரவர்கள் நால்வருடன், சேக்கிழார் பெருமானும் அமர்ந்து காட்சியளிக்கின்றனர்.

மகா மண்டபத்தில் பாதாளலிங்கமும் கோவிலின் பிரகாரத்தில் பஞ்சபூதலிங்கங்களும், திருக்காளத்தி, திருவண்ணாமலை போன்ற தலங்களில் அமைந்துள்ளதைப் போன்று இங்கும் இருபத்து ஐந்து சிவலிங்கங்களும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சப்த கன்னியர் பூசித்த ஏழு சிவலிங்கங்களும், மேற்கில் அட்டலிங்கமும் உள்ளது.



சேத்திர புராணேசுவரர் இக்கோவிலின் தனிப்பட்ட சிறப்பாகும். இது போன்றதொரு சிறப்பு வேறு எந்த கோவிலிலும் உள்ளதா என்பது ஐயமே! அம்பாளின் முகவாயினை, சுவாமி தன் வலக்கரத்தினால் தீண்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் கொண்ட திருவுருவக் காட்சியே அது. இத்திருக்கோலத்தின் அற்புதக் காட்சியாக, அம்மனை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாகவும், இடது புறமிருந்து பார்த்தால் சிரிப்பது போன்றும் தோன்றமளிக்கும். அற்புதமான இந்த சிலையமைப்பு மிக வித்தியாசமான ஒன்றாகும். மனித வாழ்க்கையில் இன்பமும்,துன்பமும், மாறி, மாறி வருவதைக் குறிப்பதாகவே இவ்வடிவம் அமைந்திருக்கலாம், என்று தோன்றுகிறது.சூரியன் பெற்ற சாபத்தின் விளைவாக ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக அம்மன் கோபமாகவும், சாந்தமாகவும் காட்சியளிப்பதாக புராணக்கதைகள் கூறுகின்றன. அருகில் பஞ்சபூதலிங்கங்களில் ஒன்றான தேயுலிங்கமும் , தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.



கருவறையின் விமான அமைப்பு, யானையின் பின்புறத் தோற்றம் போன்று மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு மட்டுமே உரித்தான மற்றுமொரு சிறப்பம்சம், பிரகாரத்தை வலம் வரும் போது வடமேற்கு மூலையிலிருந்து , இரு சன்னதிகளிலிருந்து மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். திருமேகநாத சுவாமி சன்னதியும், திரு சகலபுவனேசுவரர் சன்னதியும் இரண்டும் அருகருகே அமைந்திருப்பதும், இன்னொரு சன்னதியில் மேற்கு நோக்கிய , கூப்பிய கரங்களுடன் உள்ள மகா விஷ்ணுவையும் ஒரு சேர தரிசனம் செய்ய முடிவது மிகச் சிறப்பாகும். அங்கிருந்து வடக்குப் புறத்தில் சண்டிகேசுவரரையும், சகலபுவனேசுவரரையும், ஸ்ரீ மின்னும் மேகலையையும் தரிசிக்கலாம். ஸ்ரீமகாலட்சுமியால் வணங்கப்பெற்ற சகல புவனேசுவரரை திருநாவுக்கரசர் 10 பதிகங்களில் பாடியுள்ளார். இரு மூர்த்தங்களுக்கும் இடையில், சாந்த நாயகியான துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.

இங்கு மற்றுமொரு சுவாரசிய சம்பவமாக வழங்கப்படுவது, துர்க்கையம்மனின் இடது கரத்தில் அழகுற வீற்றிருக்கும் கிளி. அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால் அம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம். புண்ணியம் கிடைக்கப் பெற்றவர்கள் இவ்வரிய காட்சியை புறக்கண்ணிலும் காண முடியும் என்கின்றனர்.

வடக்குத் திருமாலைப் பகுதியில் நடராசப் பெருமானின் கம்பீரமான திருமூர்த்தம் கண்டு தரிசிக்கலாம். அடுத்து இக்கோவிலின் பிரதான நாயகியான , ஸ்ரீ லலிதா சகசுரநாமம் முதன்முதலில் இயற்றப்பட்ட, மகா மண்டபத்தையுடைய அம்மனின் சன்னதியை தரிசிக்கலாம். அன்னையின் ஆலயத்தினுள் நுழையும் போதே நம் மனதில் ஒரு ஆழ்ந்த அமைதியும், நிம்மதியும் பரவுவதை உணர முடிகிறது. சர்வாலங்காரப்பிரியையாக அம்மன் காட்சியளிப்பது மன நிறைவை ஏற்படுத்துவதும் நிதர்சனம். வலது காலை மடக்கி, இடது காலை நீட்டி பதுமத்தில் வைத்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கும், அழகே உருவான அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும்.

நால்வேதங்களுக்கும் இணையான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் இத்தலம். எவருமே வெல்ல முடியாத பண்டாசுரன் எனும் அரக்கனை வென்றபின் மனோன்மணி வடிவாகக் காட்சியளிக்கும் அன்னையையே இங்கு நாம் தரிசிக்கிறோம். அகத்திய மாமுனிவர் “ மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ” என்ற புகழ் பெற்ற ஸ்ரீ லலிதா நவரத்தினமாலை பாடிய தலமும் இதுவே!

விஜயதசமியன்று, அம்மன் சன்னதியில், மிகப்பெரிய அளவில், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் ஆகிய அன்னங்களைப் படையலிட்டு,சக்கரைப் பொங்கலின் இடையே குளம் போல் 3 டின் அளவிற்கு நெய் விட்டு அதில் லலிதாம்பிகையை தரிசனம் செய்வது அற்புதக் காட்சியாகும்.

வாழ்வில் ஒரு முறையேனும் இவ்வன்னையின் அற்புதக் காட்சியை தரிசிக்கவில்லையென்றால் பிறந்த பயனை அடையவில்லையென்றே சொல்லலாம்!

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.



1. தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடை அரற்கு
ஏற்றம் கோயில்கண்டீர் இளங்கோயிலே.
2. வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திருமீயச்சூர்
எம் தமை உடையார் இளங்கோயிலே.

3. பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்மு அனலாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எம் தமை உடையார் இளங்கோயிலே.

4. நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டு உகந்தான் திருமீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.
5. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்தாடுவர்
செவ்வ வண்ணம் திகழ் திருமீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே.

6. பொன் அம்கொன்றையும் பூ அணி மாலையும்
பின்னும் செஞ்சடை மேற் பிறை சூடிற்று
மின்னு மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே.

7. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்
விடைகொள் ஊர்தியினான் திருமீயச்சூர்
இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே.

8. ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறு கொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.
9. வேதத்தான் என்பர் வேள்வியுள் உளான் என்பர்
பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே
கீதத்தான் கிளரும் திருமீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.

10. கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈட் அற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.






--


காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...