Tuesday, September 11, 2012

கருணையினால் அல்ல.....!


பவள சங்கரி


ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ... எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா
அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா கொடுங்க. இன்னும் 2 மாதமாவது ரொம்ப ஜாக்கிரதையா ரெஸ்ட்டுல வச்சிருங்க. மேஜர் ஹார்ட் ஆபரேஷன் இது.
சரிங்க ஐயா. ரொம்ப சந்தோசமுங்க. வாரேனுங்க.
சரி, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து காட்டிட்டுப் போங்க

கதையே கவிதையாய்!


பவள சஙகரி
செவிடாக இருந்தவள்
ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.
ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த கைவளைகள போன்றவைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இங்கே பார் இது எத்துனை கந்தல் துணிகளாக இருக்கிறதென்று. ஆயினும் ஒரு செல்வந்தரின் மனைவியான நான், அந்த அழகியப் பொருட்களில் சிலவற்றையேனும் வாங்க வேண்டும்என்றாள்.
காலைக் காப்பியின் சுவையை இதமாக அனுபவித்துக் கொண்டிருந்தவன், என் அன்பே, நீ விரும்பும் அனைத்துப் பொருட்களையும், நீயே சென்று வாங்கிக் கொள்வதைத் தடை செய்வதற்கான எந்தக் காரணமும் இல்லைஎன்றான்.

Sunday, September 9, 2012

மொறு மொறு கிரில்ட் உருளை விரல் கறி


பவள சங்கரி

கிழங்கு வகைகளைப் பார்த்து அச்சமா? தேவையில்லை நண்பர்களே.. வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் அதிகமில்லாமல் செய்து சாப்பிடலாம். கிரில் அடுப்பில் 2 ஸ்பூண் எண்ணெய் மட்டுமே வைத்து செய்த மொறு மொறு உருளைப் பொரியலைப் பாருங்கள்! உருளைக் கிழங்கை தோல் சீவி விரல் நீளத்திற்கு ஓரளவிற்கு சன்னமாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவிவிட்டு உப்பு கலந்த நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்பு இரண்டு சிறு கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி, அதை கிரில் அடுப்பில் வைத்து பொறிக்கவும். அதிகப்படியான எண்ணெயையை வெளியே துப்பிவிடும். அதை எடுத்து மிளகுத், உப்புத் தூளும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.