Friday, June 10, 2016

பாப்பா.. பாப்பா கதை கேளு

அன்னாசி இரசம்


பவள சங்கரி


நம் தமிழகத்தின் பாரம்பரிய மதிய உணவில் இரசம்தான் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது. எவ்வளவுதான் சுவையான விருந்தாக இருந்தாலும் இரசம் இல்லாவிட்டால் அந்த விருந்து நிறைவாக இருக்காது. விருந்து என்றாலே நெய், எண்ணெய், தேங்காய், சக்கரை போன்ற கொழுப்புச் சத்து அதிகமாக சேர்த்த உணவுப் பண்டங்களே மிகுதியாக இருக்கும். அந்த வகையில் உண்ட உணவு எளிதாக செரிமானம் ஆவதற்கான சிறந்ததொரு, சுவையான மருந்தே இந்த இரசம் என்றால் அது மிகையாகாது. மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்ற பல முக்கியமான மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் சுவையும், மணமும் சற்று கூடுதலாகவே இருக்கும். திருமணம் போன்ற விசேசங்கள், பெரிய உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் விதவிதமான இரசங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று அன்னாசி இரசம். அன்னாசிப் பழம் இரத்த சோகையைக் கட்டுப்படுத்தி, தொப்பையையும் குறைக்க வழிவகுக்கிறது என்பது கூடுதல் தகவல்.