Friday, August 23, 2013

ஒரு மறவனின் கட்டழகுக் காதலி!


பவள சங்கரி




இரவுநேர இவுளியின் குளம்பொலியில் 
இன்முகம் மலரத் துடித்தெழுந்தாள் கன்னியவள்
இமாலய வேந்தனின் இடியெனச் சிரிப்பொலியில்
இதமாக இன்மொழிபேசி கனிவாகக் கவிபாடி
இன்புற்றிருக்கும் வேளையில் இடைவிடாத 
இடிச்சத்தமாக இவுளிகளின் நாராசமான குளம்பொலிகள்
இரவும், இனிமையும், இதமும், இன்பமும் இறந்துபோனது.
இருளும் தனிமையும் மீண்டும் சிறைபிடிக்க
இடர்வந்து சுமையாக்க மருள்வந்து மயங்கினாள் பேதையவள்!





படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://digital-art-gallery.com/oid/6/640x989_2525_Morning_hunting_2d_fantasy_warrior_horse_picture_image_digital_art.jpg&imgrefurl=http://digital-art-gallery.com/picture/2525&h=989&w=640&sz=300&tbnid=Vj4NzV5PpqGiHM:&tbnh=91&tbnw=59&zoom=1&usg=__casKkSKbNnLy14TuDgYctjw3YII=&docid=5fZlAkTmpbpgqM&sa=X&ei=VREYUs-XNs7irAfkpoGoCA&ved=0CEMQ9QEwBw&dur=1268

Thursday, August 22, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (24)


பவள சங்கரி
அனைத்து முக்கியமான தொழில்களைப்போலவே வெற்றியைப் பெறுவதற்குத் தடைகள் அவசியமாகிறது. வெற்றி என்பது பல்வேறு போராட்டங்கள் மற்றும் எண்ணிலடங்கா தோல்விகளின் பிறகே கிடைக்கக்கூடியது.
இருண்ட பொழுதுகளில், ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கிய அடுத்த படி, போலி எது என கண்டறியப்படும் ஒவ்வொன்றும் உண்மையை நோக்கி வழிநடத்துகிறது, எந்த ஒரு தடையும் ஒரு நாள் மறைந்தேவிடும் அதே வேளையில் அமைதியும் நிறைவுமான பாதைக்கு வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
ஓக் மேண்டினோ
 ogmandino164003
‘ரிஸ்க் எடுக்குறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’