Friday, June 24, 2016

மாய உலகில் மனம் பாடும் பாடல்!



பவள சங்கரி
18834492
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முரட்டு உலகம் – இது
உச்சியைத்தொட வக்கணை பேசும் வரட்டு நாதம் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா
இருக்கும் மடமையை வெளிச்சம் போடும் பகட்டு உலகமே – மாயையில்
ஓயாத போட்டியும் பொறாமையும் கூடிய உலகமே – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா

பாப்பா பாப்பா .. கதை கேளு! 10

‘மகத்தானப் பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்’


சீதாயணம் – மதிப்புரை

AIbEiAIAAABDCJzb5f6r79updCILdmNhcmRfcGhvdG8qKGQ0ZDQwOTE4MDVkMzA4MjZjMjBkYzExYWQzODE2NWVmYzBkYjg2YWQwAUYq-HXl0fg_jIMRCjP1KRGW0E9Dஅணுசக்தி ஆக்கப்பணியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அறிவியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் தமிழ் இலக்கியப் பணியிலும் தம்முடைய சுவடுகளை ஆழப்பதித்துள்ளார். சீதாயணம் எனும் இந்நாடக நூலின் ஆசிரியரின் நாடகம் மிக வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்ட ஒன்று. நம் நாட்டில் ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும்பான்மை மக்களின் குருதியில் ஊறிக்கிடப்பதென்பது அனைவரும் அறிந்த உண்மை. இராமாயணம் என்ற மாகாவியத்தின் நாயகன் இராமச்சந்திரமூர்த்தியும், அவர்தம் தர்மபத்தினி சீதாதேவியும் மனிதராக அவதரித்தவர்கள் என்றாலும் அவதாரங்களான தெய்வங்களாகவே கருதப்பட்டு வழிவழியாக வழிபடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இராம காவியம் பெரிதும் போற்றி பரவப்பட்டு வருவதும் கண்கூடு. திரு ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் சீதா தேவியின் தூய வாழ்வின் இன்னல்களும் அதற்கு காரணமானவர்களின் சாடல்களையும் முன்னிறுத்தி நியாயம் கேட்கும் ஒரு சீர்மிகு படைப்பு. சீதாதேவியின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், அவளுடைய தூய உள்ளம் புரிபட்டபோதும், தனிப்பட்ட முறையில் அவள்மீது துளியும் சந்தேகம் இல்லாதபோழ்தும், ஊர் மக்களின் பேச்சுகளுக்கு செவிசாய்த்து சீதாதேவியை, இரண்டு குழந்தைகளுடன் தவ முனிவரின் பாதுகாப்பில் தபோவனத்திற்கு அனுப்பப்படுகிறாள். இந்த அடிப்படையில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்ட ஒரு படைப்பு இது. சீதா தேவியை தெய்வீக அன்னையாகவும், இராமரை தெய்வ அவதாரமாகவும் வழிபடும் வழமை பாரத தேசத்தில் பல காலமாக உள்ளது. ஆனால் திரு ஜெயபாரதன் அவர்களின் கோணத்தில் இராமர் மானுடனாகப் பிறந்தவர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவதோடு, ஆணாதிக்கப் போக்கினால் சீதா தேவி பட்ட துயரங்களை உணர்வுப்பூர்வமாக உள்ளம் உருகும் வகையில் சித்தரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பகவத் கீதையும் ஆண்டவன் படைத்தது அல்ல, வியாசரின் படைப்புதான் என்றும் ஆதாரங்கள் காட்டி பொது நம்பிக்கைகளை ஆட்டம் காணச்செய்கிறார்.

Tuesday, June 21, 2016

தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்


பவள சங்கரி
தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவர்தம் தந்தையாரையேச் சாரும். பழ.நெடுமாறன் அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியாரும், ஒரு தமக்கை, ஒரு தங்கை, மூன்று தம்பிகளும் உள்ளனர்.