Wednesday, August 31, 2016

தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’




தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு அழகாக விமர்சனம் எழுதியுள்ளார்கள். திரு மானா பாஸ்கரன் அவர்களுக்கும், இந்து நாளிதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஒரு தேசத்தின் கலாச்சாரப் பின்னணியோடு அந்த தேசத்தை நாம் புரிந்துகொள்ள முற்படும்போதுதான் அதன் முழு பரிமாணத்தையும் நன்கு உணர முடியும். பாரம்பரிய இசை, நடனம், கூத்து, ஓவியம் வழியே பின்தொடர்ந்தால் ஒரு தேசத்தின் ஆழ அகலங்களை முற்றும் உணரலாம். உலக அரங்கில் நவீன ஜப்பானின் பொருளாதாரக் கொடி காற்றில் அசைந்து உயரப் பறக்கிறது. அந்த நவீனத்தின் புராதன அடையாளங்களுள் ஒன்றுதான் ‘கெய்ஷா உலகம்’.

நான்மாடக்கூடல் நாயகி!


அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை
am1
அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது.
am
இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை மாநகர். பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றியதால் கடம்பவனம் என்ற வனத்தை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைந்துள்ளதால்நான்மாடக்கூடல் என்ற அழகிய பெயரும் மதுரைக்கு உண்டு.

Tuesday, August 30, 2016

பாப்பா பாப்பா கதை கேளு! 39




மனம் ஒரு குரங்கு
ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.