Thursday, May 16, 2019

விட்டு விடுதலையாகு!



தேவையற்ற விசயங்களை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்காமல் அவற்றை போகவிட்டால்  நாம் சுமையின்றி சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் என்ன சொல்வதற்கு மட்டுமே எளிதாக இருக்கிறது. பந்தம், பாசம் என்பதெல்லாம் நம்மை எங்கே விடுகிறது. 


பாபா கூறுவது போன்று, குறுகிய வாய் கொண்ட பானையில் உள்ள தின்பண்டத்தை எடுக்க நினைக்கும் குரங்கு கையை உள்ளே விட்டு கை நிறைய அப்பண்டத்தை அள்ளிக்கொண்டு, மூடிய கையை வெளியே எடுக்கவும் முடியாமல், பண்டத்தை விடவும் மனமில்லாமல் அந்தப் பானையைச் சுமந்து கொண்டு இங்கும், அங்கும் ஓடி எளிதாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறது. கையில் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு விலகினால் தாம் சுதந்திரமாகத் திரியலாம் என்பதை உணராமலே சுமந்துத் திரியும் அந்தக் குரங்கைப் போலத்தான் நாமும் தேவையற்றவைகளை தூக்கிச் சுமந்துத் திரிகிறோம்...

என் பொன்மொழிகள்