Saturday, October 5, 2019

அகிலாண்ட நாயகி!





அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் அன்னை
புன்முறுவாய் புவியாவும் பூத்துநிற்பவள் பூமாரி
நான்மறை வித்தாய் தவத்தின் சித்தாய்
கனியின் இரசமாய் கருணைக் கடலாய் காப்பவள்!

கலைமாமணிகள் நிறைந்த சபையில்
கவிமாமணிகள் காலத்தைக் கட்டியிழுத்து
கவிமாமணிகளும் கலைமாமணிகளும் இணைந்து
கசடறக் கற்பிக்க வேதத்தைத் துணைக்கழைத்தால்
தோதாய் வந்து நின்று ஊட்டிவிட்டுப்போ!

இளங்கவிகள் பெருங்கவிகளாகி பட்டமும்
பதவியும் பரிசுகளும் விருதுகளும் வினைகளும்
விருட்சங்களாய் பரந்து விரிந்து தாமரையாய்
மலர்ந்து கலைமாமணிகளையும் கவிமாமணிகளையும்
உருவாக்கி வெற்றித் திலகமிட்டு செங்காந்தளாய்
சிவந்து சிந்தித்து சிறப்புற்று சிகரமேறி சிகரமேற்றி
இருளகன்று இன்புற்று வாழ வரமளித்துவிடு!

கலைமாமணிகளும் கவிமாமணிகளும் இளங்கவிகளும்
நாளும் பெருகி நலிவுற்ற செவ்விதழ்கள் நலமுற்று
நாற்புறமும் விருந்தும் விரிவான தொகுப்பும்
விளைவித்து விளைந்து பெருமையுடன் வலம்வர
வடிவுடை நாயகி வரமருளும் தேவிநீ!

அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குபவளாம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாடாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்துவாளாம்!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...