Friday, May 10, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)



பவள சங்கரி




விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!
அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
மகாத்மா காந்தி
சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

Wednesday, May 8, 2013

பசுமையின் நிறம் சிவப்பு





பவள சங்கரி


”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?”

“ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க.  வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.”

“ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா உங்களுக்கு. இருந்தா இப்படி பணத்தை வாங்கிக்கிட்டு மூனு மாசமா வட்டியும் கட்டாம, முதலுக்கும் வழியில்லாம தலை மறைவா இருப்பானா உன் புருசன், பேச வந்துட்டா.. இந்தா இந்த வெட்டி நியாயமெல்லாம் வாண்டாம். உன் புருசனை உடனடியா பணத்தைக் கொண்டாந்து கட்டச்சொல்லு. இல்லேனா நடக்குறதே வேற ஆமாம்...”