Monday, November 14, 2016

குழந்தைகள் தினம்!







அன்பு மலர்களே!
கவின்மிகு வனங்களே!
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்!
குயிலின் குரலில் மதிமயக்கி
நினைவிழக்கச் செய்கிறாய்!
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்!
கனிந்த பார்வையில் கல்லையும்
கற்கண்டாய் ஆக்குகிறாய்!
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்!
திரண்ட மேகமாய் நிறைந்து
நீர் வார்க்கிறாய்!
பனிமழையோ பகல்நிலவோ
பட்டொளிவீசி நிற்கிறாய்!
விழியின் அசைவில் வித்தாகி
விதியின் விருட்சமாகிறாய்!
பாடும் பறவையோ பசுவின்மடியோ
பரவசமாய் நேசமாகிறாய்!
பசுந்தளிராய் பக்கமிருந்து பரிவாய்
பூத்துக் குலுங்கி பசப்புகிறாய்!
புன்னகையெனும் கிரீடம் சூடி
புவியின் புத்தொளியாகிறாய்!
ஆயிரமாயிரம் காலம் ஆருயிராய்
ஆனந்தம்பாடி வாழ்வீர்நீவிர்!!