Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே. வரும் ஆண்டு அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலங்களும் அருள மனமார்ந்த பிரார்த்தனைகள் நண்பர்களே.




Tuesday, December 30, 2014

பனிப்புயல்


பவள சங்கரி



அடாது வீசிக்கொண்டிருக்கிறது பனிப்புயல்
குளிராடையின்றி அலையோரம் அலையுமனது
நடுங்கியபடி கடக்கிறது காலங்களை
தெருமுனை வழிகாட்டியின் அருகில்
நோட்டமிட்டவாறு கூரிய அம்புகள்
பனிப்புயலையும் குத்திக் கிழிக்கும்
வல்லமை கொண்டததன் முனைகள்
கதிரொளியால் உருகி வழியப்போகும்
அப்பனிப்புயல் ஏதோவொரு நேரம் 
நீராய்ப் பெருகி ஓடக்கூடியது

எந்த மூளை அதிக சக்தியுடையது. ?





Monday, December 22, 2014

இதயமே ..... இதயமே................





இனிய வணக்கம் நண்பர்களே!


ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், அவர் ஏற்கனவே சாதித்ததைப் பார்க்காமல், எதைச் சாதிக்க விழைகிறார் என்று பாருங்கள் - கலீல் கிப்ரான்


Saturday, December 20, 2014

திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….


பவள சங்கரி
இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.

Thursday, December 18, 2014

உடலும், மனமும் இணையும் தருணம்!



பவள சங்கரி



இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை.   யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும்  ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம்  நம்மை நாமே உணரச் செய்கிறது.  மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.  சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம்  பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம்,  ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு  ஆயுளும் கூடும். 
ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை  கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும்.  நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். 


5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது. 

ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட  சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை  நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.

Wednesday, December 10, 2014

ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!


பவள சங்கரி




பாரதமும், பா- ரதமும் பாங்காய்
பாரதியின் பாசத்தால் இணைந்தது
மாதவமாய் மண்ணில் உதித்த
மாதவனின் எண்ணமெல்லாம் பண்ணானது
மங்கையரின் நலம்நாடும் சொல்லானது
எல்லோரும் ஓர்குலம்  ஓரினமெனும்
 மாமந்திரச் சுடரானது!  இனிய
புன்முறுவல் இலங்கு திருநிறைந்தனை ! 

Friday, December 5, 2014

புத்தொளி எங்கும் பரவட்டும்!


பவள சங்கரி



புத்தொளி எங்கும் பரவட்டும்!
கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில்
முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு
பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும்
கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம்
பிரிவறியா புத்தொளி வழியறியா வானில்
விரிவுரையாய் வீசியிளம் பொழுதினில்
கதிரொளியாய் பரவி இதயவொளி கூட்டும்!

பொன் மொழிகள்


பவள சங்கரி


Sunday, November 30, 2014

துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தோழி!

பவள சங்கரி




நெஞ்சம் படபடக்க கண்கள் இருண்டு நாக்கு வறண்டு
ஓ.. பயங்கரம் என் படகு மோதியது பாறையில்
தவிர்க்க முடியாததை ஏற்பதுதானே சாத்தியம்
வெளியேறும் வழியறிந்து மனம் தெளிந்தேன்
அமைதியில் திளைக்க மோனத்தில் ஆழ்ந்தேன்
எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்

PRINCETON UNIVERSITY CHAPEL - பிரின்ஸ்டன் பல்கலைக்கழக தேவாலயம்


பவள சங்கரி


1920 இல் தீக்கிறையான மார்க்வாண்ட் தேவாலயத்திற்குப் பதிலாக இரண்டு மில்லியன் டாலர் செலவில் 1928ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேவாலயம் இது. அதிகரித்துவரும் பன்முகக் கலாச்சார பூமியான அமெரிக்காவில் கிருத்துவ மதப் பாரம்பரியம் காக்கப்படவேண்டி, பல்கலைக்கழகத் தலைவர் ஜான் கிரையர் ஹிப்பென் என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதினாலாம் நூற்றாண்டின் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிற வகையில் சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



மதரீதியான கிருத்துவ சேவை ஞாயிறு காலை 11 மணிக்கும், கோடைக்காலங்களில் மட்டும் 10 மணிக்கும் நடக்கிறது. வருடந்தோறும் பல்கலைக்கழகத்தாரின் இறந்தநாள் நினைவு தினமும் நடத்தப்படுகிறது. 1200 பேர்கள் அமரக்கூடிய இந்த தேவாலயத்தில் திருமணம், பெயர் சூட்டுவிழா, ஞானஸ்தானம், எழுச்சி நாள், இறுதிச் சடங்கு என அனைத்தும் கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமான அறிவிப்புகளுக்காகவும் இங்கு கூடுகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் இறப்பு மற்றும் 9 - 11 சோக நிகழ்ச்சி (இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு) ஆகியவைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தியானத்திற்காக தேவாலயம் திறந்திருக்கிறது. கோடைக்காலத்தில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படுகிறது.

Sunday, November 23, 2014

Bridgewater Sri Venkateswara Temple - New Jersey



பவள சங்கரி



ஸ்ரீ வெங்கடேசுவரா ஆலயம், மிக அழகாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிற கோவில் . சென்ற இரண்டு பத்தாண்டுகளில் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஆலயம்.

Wednesday, November 19, 2014

பாசவினை


பவள சங்கரி





பாசிபிடித்த மண்டபத்தினுள் 
பாசியே உணவானாலும்
பாசபந்தங்கள் பரந்திருந்தாலும்
சுற்றிச் சுற்றி சுழன்றாலும்
உள்ளிருந்தே உழன்றாலும்
சுற்றிவரும் வாளைகளின்
சுவடுகளனைத்தும் சூரியானாலும்
சுவனமின்றி உணவுமின்றி
சுழன்றுவரும் தங்கவிழியும்
கருஞ்சுனைகளும் பச்சிலைகளும்
பசுமை நினைவுச்சுமைகளாயினும்
பாசிபிடித்த மண்டபமே அரண்மனையாக
பசுமை நிறைந்த நினைவுகளே
வயிற்றின் உணவாக நாளும்
வாழும் பாசிதின்னும் கயல்களின்
பாசமிகு பரிதவிப்பு பாழடைந்த 
பாசிபிடித்த மண்டபத்தினுள்ளேயே
பதுங்கித்தான் போகும்.



Monday, November 17, 2014

ஸ்ரீவெங்கடேசுவரா ஆலயம்


பவள சங்கரி


இரண்டு நாட்களாக உறையும் குளிரில் ஓயாத பயணம்.. சிகாகோ மாநிலம் பனி மழையில் நனைய ஆரம்பித்துவிட்டது. -4 டிகிரி செண்டிகிரேட். 


Friday, November 14, 2014


உயிர்களின் சங்கமம்
உணர்வுகளின் உன்னதம்
மனங்களின்  மயக்கம்
மழலையின் மாசற்ற சிரிப்பு

Thursday, November 13, 2014

மாமரத்துப் பூவு!


பவள சங்கரி


இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்து
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே

காலம் காலமாய் காத்திருந்தாலும் காததூரத்தில்
கனிந்திருந்தாலும் வேதம் என்று மலைத்திருந்தாலும்
மலையாய் மோதும் கீதம் வென்றாலும் 
அலைஅலையாய் அதிர்ந்திருந்தாலும் ஆதவனேயானாலும்
அடக்காத குளிர்தான் இதமான பாடல்தான்
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
வான்பறந்த தேன்சிட்டு எந்நாளும் வாராதம்மா!

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

கோயில் கொண்ட சிற்பம் மீளாது எந்நாளுமது
மையல் கொண்ட மாதுளை தாளாத சந்தமது
தந்தன தந்தன தாளம் கேட்டும் அசையாத சிற்பமது
மாளாத பாசங்களும், நேசங்களும் அலங்காரமாய்
பவனிவரும் தங்கத்தேரில் பொன்னூசல் ஆடுமனசு
இசையருந்தும் மனசது மலரும் அரும்பாகும்
மாலையாய் சூடும் தென்றல் மகிழ்ந்தாடும் நிதமும்
கவிபாடும் கணந்தோறும் புவியேழும் பொலிவாகும்

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 



Wednesday, November 12, 2014

புல்மேல் பனித்துளி


பவள சங்கரி

இன்று பனிப்பெண் முதன் முதலில் மெல்லத்தன் அழகு முகம் காட்டி மறைந்தாள். ஏதோ சொல்லத்தான் வந்திருப்பாள் போல.. சொல்லாமலே சென்றுவிட்டாள். விரைவில் மீண்டும் அவள் வரவிற்காக ஒரு பாடலுடன் காத்திருக்கிறேன்.. பாடல் பிடித்திருந்தால் ஒருவேளை உடன் வருவாளோ... சரி கீழ்கண்ட இந்த என் பாடலை, ‘மே மாதம்’ படத்தில் வரும் என் மேல் விழுந்த மழைத் துளியே என்ற கவிஞர் திரு வைரமுத்து அவர்களின் பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்.. பிடித்திருந்தால்...



புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்
கல்லை உருக்கிய கவிமழையே
கனவில் நிறைந்த கற்கண்டே
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்
வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்
கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்
உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
குழலோசையாய் அது இசைத்திடுமோ
பனியும் காற்றும் உரசுகையில்
மெல்லிய கீதம் இசைத்திடுமோ
மலையும் நதியும் உரசுகையில்
எந்த மொழியில் குலவிடுமோ
நினைவெல்லாம் பார்வையானால்
மொழியெலாம் ஊமை ஆகிடுமோ
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
என்னை உருக்கிய கவிமழையே
எங்கே போனாய் இத்தனை காலமாய்
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
---------------------------------------------------------------------------------
http://youtu.be/k57OsWDSH88http://youtu.be/k57OsWDSH88

ஆட்டிசம்

பவள சங்கரி


குழந்தைகளை ஆட்டிப்படைக்கும், ‘ஆட்டிசம்’ என்ற கொடிய நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நானும் ஏற்கனவே இதுபற்றி இங்கேயும் விவாதித்திருக்கிறேன். இன்றும் சொல்லுமளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அதிகமான பாதிப்பே உள்ளது. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் குறித்த விரிவான என் கட்டுரை இதோ இங்கே ..http://coralsri.blogspot.com/2012/08/blog-post_27.html

St. Louis - America

பவள சங்கரி


Sunday, November 2, 2014

THE IOWA STATE CAPITOL

பவள சங்கரி

நூறாண்டிற்கும் மேலாக ஐயோவா மாநிலத் தலைநகரின் அரசாங்கம் மற்றும் அரசியல் அடையாளச் சின்னமாக விளங்குவது, 275 அடி உயரமுள்ள, 23 கேரட் தங்கத்திலான குவிமாடத்துடனான கட்டிடமே. குவிமாடத்தின் மீதிருக்கும் 250,000 தங்க இலைகள் ஒரு அங்குலம் தடிமனே உடையது. 1871ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு1886இல் தான் முடிவடைந்திருக்கிறது. செங்கல், சுண்ணாம்புக்கல், கிரானைட் மற்றும் மணற்கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து, தெற்காக 363 அடியும், 8 அங்குலமும், கிழக்கிலிருந்து மேற்காக 246 அடி, 11 அங்குலமும் கொண்டதாகும். இடையில் 
1904ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1998இல் துவங்கி, 1999இல் 400,000 டாலர் செலவில் கட்டி முடித்திருக்கிறார்கள். அற்புதமான, ஓவியங்கள், மரச்சிற்பங்கள், சுவர் அலங்காரங்கள், உட்கூரை வண்ணங்கள் கண்ணைப்பறிப்பதாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Wednesday, October 29, 2014

தீபாவளிக் கொண்டாட்டம் + ஆப்பிள் எடுத்தல்


அந்நிய மண்ணில் இந்திய ஒருமைப்பாடும், தீபாவளிக் கொண்டாட்டங்களும்.... நம்ம வீட்டு தீபாவளி!

Monday, October 27, 2014

SCIENCE CENTRE OF IOWA - அமெரிக்கா


நேற்று SCIENCE CENTRE OF IOWA சென்றிருந்தோம்.. என்ன ஒரு ஆச்சரியம்.. அங்கு நம் நடராசர் சிலையும், சூரியனார் சிலையும் லார்ட் சிவா என்ற தலைப்பிலேயே இருக்கிறது. இங்கு குழந்தைகளை அறிவியல் துறையில் ஈடுபடுத்தி பின்னாளில் அவர்கள் விஞ்ஞானிகள் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தாங்களே அதை செயல்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுப்பதைக்கூட இயல்பாக அமைத்துள்ளனர். ராக்கெட் செய்து அனுப்பும் முறை, மற்றும் ராக்கெட் தரையிறங்கும் விதத்தையும் எளிதில் புரியும் வண்ணம் அமைத்துள்ளனர். வானியல் துறையில் கோளரங்கங்களும், உயிரியல் துறையில் டைனோசர் எலும்புக்கூடும் பிரம்மாண்டமாக வைத்துள்ளனர்.. அந்தப் படங்கள் விரைவில் பகிர்வேன்....;-))

Saturday, October 25, 2014

கற்பனைக்கெட்டாத அற்புதக்காட்சி


பவள சங்கரி

இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வித்தியாசப்பட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுக்கும் அவைகள் நம்மை பிரமிக்கச் செய்வன. விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், மெய்ஞ்ஞானமும் அமைதியாக தம் பங்கைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ காணமுடிகிறது. இதுவே மனிதர்களின் அத்துமீறல்களின் எல்லைக்கோடுகளாகவும் ஆகிவிடுகிறது. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் உலகம் முழுவதற்குமான அந்த பொதுவான சக்தி ஒன்றேதான் அல்லவா.. நம் இந்துக்களின் மகத்தான மாபெரும் சக்தி என்றும், வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசனம் பெறவேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தக்கூடியதுமான அந்த ஒன்று திருக்கயிலாயம். மெய்மறக்கச் செய்யும் அச்சுகானுபவம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.

Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


அன்பினிய நண்பர்களுக்கு,

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.



அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

Monday, October 20, 2014

ST. LOUIS ARCH - U.S.A.


Happy Diwali !! Hope everybody may be enjoying Deepavali. 
St. Louis Arch is really amazing Mechanical Engineering Marvellous!! Likewise the Museum! Worth spending time and money for visiting this wonderful place , which is the gateway of Western Regions of America! Will add more valuable details about this soon...


Saturday, October 18, 2014

கவறு


பவள சங்கரி



சதாசர்வமும் உருண்டாலும் உதிருவதில்லை
வீழ்ந்தால் நிகழ்வாக - வீழாமல் கனவாக
விதைத்தவைகள் விதியென்னும் வீதியாய்
வெட்டும் விவேகமாய் வினையைச் சுமந்தபடி
ஆட்டமும் ஓட்டமும் நாட்டமுடன் நயத்துடன்
பாட்டமும் பட்டமும் பதவிசாய் பந்தமாய்
நேசமும் நிசமும் கடைச்சரக்கான கவறுக்காய்கள்!
நொறுங்கிப்போகும் கவறும்கூட  காவியமாகும்!!

ராமனுக்கொரு கவறு சீதைதானது!
ராவணனுக்கொரு கவறு சூர்ப்பனகை!
துரோணருக்கொரு கவறு ஏகலைவன்!
கவறுக்கொரு காவலரண் கவர்ந்தவருக்கே!
சொற்சதங்கைச் சொக்கட்டானின் கபடமன்றி
கற்றைக்கற்றையாய் கருத்துக்காட்சிகளின் வசீகரம்!
பொற்கைப் பாண்டியனின் எழுதுகோலின் களிநடனம்!
கவறுகள் உருண்டோடுமோசை புவிவிசையின் மெல்லிசை!!



ஒன்பதாம் தந்திரம் 17. மறைபொருட் கூற்று - பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம்





1 காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

 
2 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.

Sunday, October 12, 2014

சுதந்திரப்பள்ளு!





சுதந்திரப்பள்ளு! ஊருக்குகந்த பாடமதையள்ளு!
பாடும் புள்ளும்  ஊரும் தேனும் ஒன்றெனக்கொள்ளு!
ஓடிக்களைத்த ஒத்தைக் குயிலொன்னு
ஓயாமல் ஓசையெழுப்பியபடி
கூவிய மொழியெல்லாம் முச்சந்தியில்
முக்காடிட்டு முகம் புதைத்தபடி
தேடிய புள்ளின் கலங்கிய சித்தம்
பதறாமல் சிதறாமல் பறந்தபடி

Monday, October 6, 2014

அன்பெனும் சிறைக்குள்!


அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். நேற்று கலைவாணிக்குகந்த, உன்னதமான விசயதசமி தினத்தில் பழனியப்பா பதிப்பகத்தார் என்னுடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதை என் வரமாகக் கருதுகிறேன். மிக அழகாக அணிந்துரை வழங்கி எம்மை கௌரவித்துள்ள அன்பினிய நண்பர்கள் திரு இசைக்கவி ரமணன் மற்றும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.




Saturday, October 4, 2014

ஹாங்க் காங்க் விமான நிலையம்


ஹாங்க் காங்க் , சீனப்பேரரசின் ஆளுமையின் கீழ் சில புரிந்துணர்வுகளுடன் ஏற்பட்ட ஆட்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து சுமாராக 4000 மைல் தொலைவில் உள்ளது. உலக வணிகத் தலை நகரங்களின் ஒன்றாகக் கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது... அனைத்து வகையான மக்களும், அமைதியுடனும், செழிப்புடனும் வாழ்ந்த காலங்கள் போக, இன்று சுதந்திர வேட்கையுடன் கூடிய மக்கள் ஒரு புறமும், அதற்கு எதிர்ப்பாக ஒரு பிரிவினரும், கலவரம் உணர்வுகொண்டு, பௌத்த கொள்கைகளின்படி அமைதியுடன் வாழ்ந்த காலங்கள் மாறிவரும் நிலை ஏற்படுள்ளது. 99 ஆண்டுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தபோது பொருளாதார வளர்ச்சியடைந்த இந்த மண் அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சீனப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. சுதந்ததிரமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தணியாத தாகத்தினால், காந்தி கண்ட சுயராச்சியம் என்ற உணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, இன்று வீதிகளில், பல ஆயிரம் மக்கள் இறங்கி போரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருத்து ஏற்புடையதோ அல்லவோ, என்றாலும் காந்திய வழியில் போராடுவது பாராட்டிற்குரியது. வானும், மண்ணும், கடலும், மலையும் இணைந்து வளம் கொழிப்பாதாக் இருக்கும் இந்த பூமி என்றென்றும் வளத்துடன் வாழ வாழ்த்துவோம்.. இதோ சற்று முன் எடுத்த சில புகைப்படங்கள்.

Saturday, September 27, 2014

கற்பகவல்லியே! காமாட்சியே!


கற்பகவல்லியே! காமாட்சியே!

நன்றி : வல்லமை


பவள சங்கரி


நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே 
பாவவினை களையும் வரமளிப்பவளே!!
கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!
சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?
ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!