Saturday, October 4, 2014

ஹாங்க் காங்க் விமான நிலையம்


ஹாங்க் காங்க் , சீனப்பேரரசின் ஆளுமையின் கீழ் சில புரிந்துணர்வுகளுடன் ஏற்பட்ட ஆட்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து சுமாராக 4000 மைல் தொலைவில் உள்ளது. உலக வணிகத் தலை நகரங்களின் ஒன்றாகக் கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது... அனைத்து வகையான மக்களும், அமைதியுடனும், செழிப்புடனும் வாழ்ந்த காலங்கள் போக, இன்று சுதந்திர வேட்கையுடன் கூடிய மக்கள் ஒரு புறமும், அதற்கு எதிர்ப்பாக ஒரு பிரிவினரும், கலவரம் உணர்வுகொண்டு, பௌத்த கொள்கைகளின்படி அமைதியுடன் வாழ்ந்த காலங்கள் மாறிவரும் நிலை ஏற்படுள்ளது. 99 ஆண்டுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தபோது பொருளாதார வளர்ச்சியடைந்த இந்த மண் அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சீனப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. சுதந்ததிரமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தணியாத தாகத்தினால், காந்தி கண்ட சுயராச்சியம் என்ற உணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, இன்று வீதிகளில், பல ஆயிரம் மக்கள் இறங்கி போரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருத்து ஏற்புடையதோ அல்லவோ, என்றாலும் காந்திய வழியில் போராடுவது பாராட்டிற்குரியது. வானும், மண்ணும், கடலும், மலையும் இணைந்து வளம் கொழிப்பாதாக் இருக்கும் இந்த பூமி என்றென்றும் வளத்துடன் வாழ வாழ்த்துவோம்.. இதோ சற்று முன் எடுத்த சில புகைப்படங்கள்.



எல்லாப் பொருட்களும் யானை விலை, குதிரை விலை, - நம் போன்ற சாதாரண மக்களுக்கு, வேடிக்கை பார்க்க மட்டுமே...-))) நல்ல நூல்கள் எத்தனை.. எத்தனை.. விலை அப்பப்பா.. குறைந்தது 150 டாலர். ..

No comments:

Post a Comment