Thursday, May 12, 2016

அருள்மிகு இலக்குமி நரசிம்மர் ஆலயம் (நாமக்கல்)



மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். 






அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன்.  ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும்.  மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடைவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். 


நாமக்கல் கமலாலயம் என்ற புண்ய தீர்த்தம் உடையது. சிறீ நாமகிரியம்மன் திருக்குளத்தில் அவதரித்து சிறீநரசிம்ம மூர்த்தியை வணங்கி தவம் மேற்கொண்டு அருள் பெற்றதால் இக்குளம் கமலாலயம் என்று சிறப்புற்றது. தேவர்கள், சிறீநரசிம்ம மூர்த்திக்குத் தெற்கே ஓர் நீர்நிலையை ஏற்படுத்தி சிறீநாமகிரி லட்சுமி நரசிம்மன், சிறீரங்கநாயகி ரங்கநாதர், சிறீஆஞ்சநேய சுவாமிகள் ஆகியோரை அருச்சித்துச் சென்றதால் அது தேவதீர்த்தம் என்று வழங்கலாயிற்று. வடக்கே பிரம்மனோத்தமர் உருவாக்கிய சக்கரதீர்த்தமும் உள்ளது. சிறீபதி என்ற அந்தணர் ஒருவர் ஒரு முறை கொல்லிமலைக் குகையில் இறைவனை நோக்கித் தவம் செய்ய, அப்போது வரதராஜப் பெருமாளாகத் தோன்றியவர், அவர்தம் விருப்பத்திற்கிணங்க மலை உச்சியில் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகிறது.

விஞ்சுமெழில் வண்ணக் காட்சி!





எண்ணமதில் தோன்றுதொரு காட்சி - வண்ணக்
கோலங்களில் நல்லோரின் ஆட்சி!
வீடுதோறும் மங்கல முழக்கம்
வீதிதோறும் நவீனமயமான பள்ளி
கேடுதீரும் பெற்றோரும் துள்ளி
நாடு முற்றிலும் நல்லுழைப்பாளிகள்
விஞ்சுமெழில் நலமுடன் வந்துதித்தே
கொஞ்சுமொழி சிறாருடன் கூடிக்களித்தே
கேடின்றி வாழ வழியமைப்போர் நாடியே 
கேண்மை கொண்டே ஏற்பீர் அவராட்சியே!
மேன்மை கொண்டே ஒளிருமேயவர் மாட்சியே!
தங்குமின்பம் என்றும் தகைமையின் நீட்சியே!
தரணிபோற்றும் பாரதத் தாயவள் காட்சியே!


Wednesday, May 11, 2016

மக்கள் கேள்வி மேடை!


தமிழ்நாடு சட்டப் பேரவையின் 15-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. மிகப் பிரம்மாண்டமாக, 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அதில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவரையோ அல்லது கூட்டணித் தலைவரையோ ஆளுநர் ஆட்சியமைக்க உரிமை வழங்குவார். அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார்.
அரசியலுக்கு வருவது என்பது மக்களுக்கு சேவை செய்வது, தன்னலம் கருதாத முழுமையான மக்கள் தொண்டு என்ற எண்ணமே துளியுமின்றி, அரசியல்வாதியாவது என்பது சிரமமின்றி பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செலுத்தவும் வழிவகுப்பது என்ற எண்ணமே அரசியல்வாதிகளுக்கு மேலோங்கியிருப்பது வருந்தத்தக்கது. அதிகாரமும் பண வசதியும் தேவைப்படுகிறது என்பதற்காகவே பலரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
வாக்காளர்களிடம் இருக்கும் வாக்கு அதிகமான சக்தி பெற்றது. அதிகாரம் கொடுக்கக் கூடியது போன்றவற்றைப் பல வாக்காளர்கள் அறியவில்லை என்பதே சிறு இலவசங்கள் மூலம் மக்களை எளிதாக விலைக்கு வாங்க வழியமைத்துவிடுகிறது. அப்பட்டிப்பட்ட அற்பமான பொருட்களுக்கு விலைபோய் வாக்களித்து விடுவதால் அது ஐந்தாண்டு காலத்திற்கான பாதிப்பு மட்டுமல்ல; பல ஆண்டுகளுக்கான பாதிப்பாகிவிடுகிறது என்ற விழிப்புணர்வே சிறிதும் இல்லாமல் செயல்படும் மக்களாலேயே இதுபோன்ற பாதிப்புகள் நேர்ந்துவிடுகின்றன. தேர்தல் என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடும் திருவிழா அல்ல. அங்கு கேளிக்கைகளுக்கோ கொண்டாட்டங்களுக்கோ இடம் இல்லை என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும். தன்னலத்துடன் சமூக நலமும் சார்ந்து சிந்தித்து செயல்படவேண்டிய விசயம். மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே செய்வது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களாட்சியை நலமிக்க நல்லாட்சியாக நிலைபெறச் செய்வதும் குடிமக்களாகிய நம் கையில்தான் உள்ளது.
சனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் உச்ச நிலை. அரசியல் அதிகாரம் என்பது தேர்தல் வழியாக மட்டுமே வருகிறது. அதனால் பொதுமக்களின் பொறுப்பான பங்களிப்பு இதில் அவசியம் இருக்க வேண்டும். நூறு சதவிகிதம் வாக்களிப்பு மட்டுமே மக்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதோடு அதுவே சனநாயகத்தின் வெற்றி என்பதுமாகும். வாக்களிப்பது அரசியல் கடமை அல்ல, அரசு மக்களுக்கு வழங்கும் உரிமை என்பதை உணராதவர்களுக்கு உணரச்செய்ய வேண்டியதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை ஊழியர்களின் அத்தியாவசியக் கடமை. உண்மையான அரசியல் கட்சிகள், நேர்மையான வேட்பாளர்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் வாக்களிக்கவேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தொகுதியில் தலை காட்டும் வேட்பாளர்களையும், சுயநலத்திற்காக மட்டும் அரசியலுக்கு வரும் வேட்பாளர்களை இனம்கண்டு ஒதுக்கும் வல்லமையும் பெறவேண்டும். பேரணிகள், மாநாடுகள் வெற்று அறிக்கைகள் கொண்டு மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையே தேர்தல் சொல்லிக் கொண்டிருக்கிறது.பேரணிகள், மாநாடுகள் நம்பகமற்ற அறிக்கைகள் போன்றவைகள் மட்டும் மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையும் வேட்பாளர்களும் உணரவேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே புதியதொரு முயற்சியாக வேட்பாளர்களும், வாக்களர்களும் நேரிடையாகச் சந்திக்கும், ‘மக்கள் கேள்வி மேடை!’ என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கறிஞர், கவிமாமணி திரு கே.இரவி அவர்களின் இடைவிடா முயற்சியின் பயனாக  இத்திட்டம் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நடந்த இந்த அரிய நிகழ்ச்சியின் தொகுப்பைக் காண்போம்….
082b69da-cb89-4372-9b9e-da76ac54590c

‘கைத்தறிக் காவலர்’ மு.ப. நாச்சிமுத்து!



எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
http://www.vallamai.com/?p=68441
a09192c1-2a27-4dd7-94a9-f23a7e79b832

Sunday, May 8, 2016

சின்னச் சின்ன இழை....


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் இது. இந்தப்பாடலை எழுதுவதற்காக காஞ்சிபுரம் நெசவாளர் குடியிருப்பில் ஒரு வாரம் தங்கியிருந்து, இடைவிடாமல் ஒரே சீரான தறிகளின் ஓசையின் மெட்டு மூலமாகவே மேற்கண்ட பாடலை எழுதினாராம்.


சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் கைத்தறி சேலையைப் போல் பட்டுக்கோட்டையாரின் தமிழ் சொற்கள் இந்தப் பாடலில் பின்னிப் பின்னி வருவதைப் பாரீர் !

அன்னையர் தின வாழ்த்துகள்!




தாயே
வரமருள்வாய் நீயே
மாயமாய் மறையும் நிம்மதியே
தாயே மீண்டும் சேயாய் மாறி
உன் மடிசாய வேண்டுமம்மா
நித்தியச் சொரூபமே!
 தாயே!