Friday, December 5, 2014

புத்தொளி எங்கும் பரவட்டும்!


பவள சங்கரி



புத்தொளி எங்கும் பரவட்டும்!
கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில்
முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு
பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும்
கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம்
பிரிவறியா புத்தொளி வழியறியா வானில்
விரிவுரையாய் வீசியிளம் பொழுதினில்
கதிரொளியாய் பரவி இதயவொளி கூட்டும்!

பொன் மொழிகள்


பவள சங்கரி


Sunday, November 30, 2014

துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தோழி!

பவள சங்கரி




நெஞ்சம் படபடக்க கண்கள் இருண்டு நாக்கு வறண்டு
ஓ.. பயங்கரம் என் படகு மோதியது பாறையில்
தவிர்க்க முடியாததை ஏற்பதுதானே சாத்தியம்
வெளியேறும் வழியறிந்து மனம் தெளிந்தேன்
அமைதியில் திளைக்க மோனத்தில் ஆழ்ந்தேன்
எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்

PRINCETON UNIVERSITY CHAPEL - பிரின்ஸ்டன் பல்கலைக்கழக தேவாலயம்


பவள சங்கரி


1920 இல் தீக்கிறையான மார்க்வாண்ட் தேவாலயத்திற்குப் பதிலாக இரண்டு மில்லியன் டாலர் செலவில் 1928ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேவாலயம் இது. அதிகரித்துவரும் பன்முகக் கலாச்சார பூமியான அமெரிக்காவில் கிருத்துவ மதப் பாரம்பரியம் காக்கப்படவேண்டி, பல்கலைக்கழகத் தலைவர் ஜான் கிரையர் ஹிப்பென் என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதினாலாம் நூற்றாண்டின் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிற வகையில் சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



மதரீதியான கிருத்துவ சேவை ஞாயிறு காலை 11 மணிக்கும், கோடைக்காலங்களில் மட்டும் 10 மணிக்கும் நடக்கிறது. வருடந்தோறும் பல்கலைக்கழகத்தாரின் இறந்தநாள் நினைவு தினமும் நடத்தப்படுகிறது. 1200 பேர்கள் அமரக்கூடிய இந்த தேவாலயத்தில் திருமணம், பெயர் சூட்டுவிழா, ஞானஸ்தானம், எழுச்சி நாள், இறுதிச் சடங்கு என அனைத்தும் கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமான அறிவிப்புகளுக்காகவும் இங்கு கூடுகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் இறப்பு மற்றும் 9 - 11 சோக நிகழ்ச்சி (இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு) ஆகியவைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தியானத்திற்காக தேவாலயம் திறந்திருக்கிறது. கோடைக்காலத்தில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படுகிறது.