Monday, December 17, 2012

வாழ்வே தவமாய்!




    “வீணையடி நீ எனக்கு,
    மேவும் விரல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு,
    புது வயிரம் நானுனக்கு”


 பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் பொழிவது உறுதி என்று பிரபல இசை விமர்சக வித்தகர் சுப்புடுவிடமே தம் இளம் வயதிலேயே விருது பெற்ற பெருமையுடையவள். இன்று காதோரம் சில நரை முடிகள் எட்டிப் பார்க்கும பருவத்திலும், குரலிலும், மீட்டும் இசையிலும் சற்றும் தொய்வில்லாத அதே வளம் கண்டு வணங்காதவர் இலர்.