Wednesday, November 19, 2014

பாசவினை


பவள சங்கரி





பாசிபிடித்த மண்டபத்தினுள் 
பாசியே உணவானாலும்
பாசபந்தங்கள் பரந்திருந்தாலும்
சுற்றிச் சுற்றி சுழன்றாலும்
உள்ளிருந்தே உழன்றாலும்
சுற்றிவரும் வாளைகளின்
சுவடுகளனைத்தும் சூரியானாலும்
சுவனமின்றி உணவுமின்றி
சுழன்றுவரும் தங்கவிழியும்
கருஞ்சுனைகளும் பச்சிலைகளும்
பசுமை நினைவுச்சுமைகளாயினும்
பாசிபிடித்த மண்டபமே அரண்மனையாக
பசுமை நிறைந்த நினைவுகளே
வயிற்றின் உணவாக நாளும்
வாழும் பாசிதின்னும் கயல்களின்
பாசமிகு பரிதவிப்பு பாழடைந்த 
பாசிபிடித்த மண்டபத்தினுள்ளேயே
பதுங்கித்தான் போகும்.



Monday, November 17, 2014

ஸ்ரீவெங்கடேசுவரா ஆலயம்


பவள சங்கரி


இரண்டு நாட்களாக உறையும் குளிரில் ஓயாத பயணம்.. சிகாகோ மாநிலம் பனி மழையில் நனைய ஆரம்பித்துவிட்டது. -4 டிகிரி செண்டிகிரேட்.