Thursday, August 30, 2012

இது...இது... இதானே அரசியல்!



ஏப்பா.... சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே...?”
கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு... அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல... இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை சேத்துக்கணுமா... போகட்டும்மா.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பாக்கலாம்..
ஏம்ப்பா. இன்னும் கொஞ்ச நாள் போனா மட்டும் எங்கனா மேல இருந்து கூரைய பிச்சிக்கிட்டுக் கொட்டப் போகுதா.. வர புள்ள நல்லா தையல் தைக்குமாம், அதுவும் நாலு காசு சம்பாதிக்காமயா இருக்கப்போவுது....
இல்லமா.. தங்கச்சி பிரசவமாவது முடியட்டும் பாக்கலாம்...
அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாலும், வேலைக்கு வந்தும் நினைவு முழுவதிலும் அந்தப் பெண்ணின் முகமே நிழலாடியது. சம்பிரதாயமாக பெண் பார்க்கும் படலம் நடக்காவிட்டாலும், அக்காவின் நெருங்கிய உறவு என்பதால் சில விசேசங்களில் பார்த்து சொக்கிப்போன அனுபவம் இன்று வாட்டி எடுக்கிறது. தள்ளிப்போடுவதால் நட்டம் தனக்குத்தான் என்பதும் புரிந்தது. அம்மா சொன்னதுபோல, தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பதற்கான பெரிய சிறப்புக் காரணம் ஏதும் தன்னிடமில்லை என்பதும் தெரிந்ததுதானே.. மனதில் இருந்த குழப்பரேகை முகத்திலும் தெரிந்த்து.

கதையே கவிதையாய்!



இரு பாதுகாவல் தேவதைகள்
ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள்.
ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது.
மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதிஎன்று பகன்றது.
முதலாம் தேவதை, “அது எளிதான பணிதானே. நான் பாவிகளை நன்கு அறிந்திருக்கிறேன். மேலும் பலமுறை அவர்களுடைய பாதுகாவலராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இம்முறை அதோ அங்கிருக்கும் மரங்களின் நிழலில் வாழுகின்ற நற்துறவி ஒருவரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதுவும் மிகச்சிரமமான மற்றும் அதிசூட்சுமமான பணி என்பதும் திண்ணம்.”. என்றது.
முதல் தேவதையோ, “ஒரு பாவியை பராமரிப்பதை விட ஒரு துறவியை பராமரிப்பது எங்கனம் சிரமமாக இருக்கும்?, இது உம்முடைய ஒரு ஊகம் மட்டுமேஎன்றது.

Monday, August 27, 2012

கள்ளிப் பூக்கள்



பவள சங்கரி


திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மூன்றாம் வயது ஆரம்பிக்கும் தருணம், குழந்தையின் போக்கில் பெற்றோர்கள் சில மாற்றங்களை உணர்ந்தனர். குழந்தை திடீரென பெற்றோர்களின் அழைப்பிற்கு கவனம் செலுத்தவில்லை. தனிமைப்படுத்தப்பட்டது போன்றும், சுற்றி நடக்கும் விசயங்களில் ஈடுபாடு இல்லாமலும் நடந்து கொண்டது. இரண்டு வயது குழந்தைக்குரிய மழலை இயற்கையாகத்தான் இருந்தது. நாளாக ஆக, குழந்தையிடம் பல மாற்ற்ங்கள் தெரிய ஆரம்பித்தது. தனிமையில் இருக்க ஆரம்பித்தது. மற்ற குழந்தைகளுடன், பேசவோ, விளையாடவோ செய்யாமல் ஒதுங்கி இருந்தது. பெற்றோருக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை புரிந்தது.