Wednesday, June 15, 2016

பஞ்சமாபாதகம்





கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு.

வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம்.


பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
கொன்ற பாதகத்தில் கொடும் பொய்

என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு. – திருப்பனந்தாள் புராணம்

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பழமொழி உறுதியாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.


வள்ளுவப் பெருந்தகை இதையே
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று  (297)


அதாவது பொய்யாமையை மட்டும் கடைபிடித்தால் போதும்; மற்ற எந்தவொரு தர்மமும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை என்கிறார்.