Thursday, October 26, 2017

சூரசங்காரம்!


நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி!


முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார்.
IMG_20171025_183821147
IMG_20171025_181904034
ஆறுமுகனின் திருவிளையாடல்களுள் ஒன்றான சூரசங்காரம் என்பது ஒரு குறியீடு. ஆணவம் எனும் அசுரனை அழித்து நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தும்பொருட்டு சக்தி அம்சமாக எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு திருமுகங்கள் 6, படைவீடுகள் 6, வளர்த்தெடுத்த கார்த்திகைப்பெண்கள் 6 , சரவணபவ எனும் திருமந்திரமும் 6 எழுத்து.
IMG_20171025_182523646
மலைக்கோவிலும், திரு ஆவினன்குடி ஆலயமும் மாலை 4 மணிக்கே குமரன் சூரனை வதம் செய்ய கிளம்பியவுடனே நடை சாத்தப்படுகிறது. பின் சூரசங்காரம் முடிந்தபின் ஆலயத்துனுள் எழுந்தருளுகிறார்.

No comments:

Post a Comment