| ![]() | |||
|
இது கவிஞர் திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் எமக்களித்த வாழ்த்துப்பா.
என் அன்பினிய தோழி நாவலாசிரியை, கவிதாயினி, பிரபல எழுத்தாளர் திரு ராகவன் அவர்களின் தவப்புதல்வி, திருமதி ஷைலஜா அவர்கள் அளித்த வாழ்த்துப்பா.
வெண்தவளப் புன்முறுவல் வீரமா சக்தியின்பேர்
பெண்துவளத் தான்சுமந்த பேறென்னே! - எம்பவள
சங்கரியாள் தோன்றிய தங்கத் திருநாளை
இங்கரியான்* வாழ்த்தல் இயல்பு!
*இங்கரியான் = இங்கு அரி யான்.
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன இனிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவள சங்கரி
| ![]() ![]() | ![]() | ||
|
அன்புக்கு மறுபெயரே
ஆற்ற்லில் வல்லவரே
இன் மொழி உரைப்பவரே
ஈரோட்டில் வாழ்பவரே
உள்ளத்தில் நல்ல உள்ளம்
ஊக்கப்படுத்தும் பலரை
எந்நாளும் அது பவழாக்கு
ஏற்றமுடனே உண்டு
ஐங்கரன் அருளோடு
ஔவை வளர்த்த தமிழில்
படைப்புகள் பல அளிக்க!
பல்லாண்டு வாழ்க தோழி!தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன இனிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவள சங்கரி
No comments:
Post a Comment