Tuesday, July 28, 2015

கலங்கரை விளக்கு ஒளியிழந்தது!



ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவச் செல்வங்களுடன் ஒரு கருத்தரங்கில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நம்முடைய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி, ஒளியூட்டிக்கொண்டிருந்த தீபம் நம்மை விட்டு விலகியது தாங்கொணாத் துயரம் அளிப்பது. கனவு காணுங்கள் என்று இளைய சமுதாயத்தினரை ஊக்கப்படுத்திய ஐயா இப்படி எங்களை தவிக்கவிட்டு செல்ல எப்படி மனம் வந்தது…
டாக்டர் கலாம் அவர்கள் நம் இந்தியத் திருநாட்டின் 11வது குடியரசுத் தலைவராக, 2002 முதல் 2007 ம் ஆண்டு வரை தன்னலமற்ற தொண்டு புரிந்தவர். ராமேசுவரத்தில் அக்டோபர் 15, 1931 இல் ஒரு படகுக்காரருக்கு மகனாக அவதரித்தவர். கலாம் அவர்கள் பத்மபூஷன், பாரத ரத்னா ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment