![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicmFvLd6eThNdjHuzaHUpASMMJK-9xJ8UzywHBJwgC_t_qGJXqAgTTcLSmWHVsSiqCwfNPc9BTN3LEHLU96PV5UQ88FtV_FylB8KFUNGd8OlZjZUhHwNiDgHl2nmQi5fmkGLmdAoqqpwU/s400/%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg)
பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!
பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.
வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.
வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.
முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்
முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்
நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்
பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.
பி.கு. உப்புமடச்சந்தி பதிவர் ,அருமைத் தோழி ஹேமாவின் கவிதைப் போட்டிக்காக எழுதுயது. நன்றி ஹேமா.
No comments:
Post a Comment